சேனையூர் கிராமிய வைத்தியசாலை
1948 இலங்கை சுதந்திரத்திற்கு பின்பு, இலங்கையில் சுகாதாரத் துறையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது என்று சொல்லலாம்.அதனடிப்படையில் கிராமங்கள் தோறும் கிராமிய வைத்திய சாலைகள் அமைக்கப்பட்டன.மூதூர் கிழக்கில் இரண்டு இடங்களில் இந்த வைத்தியசாலைகள் ஒன்று சேனையூரிலும் மற்றது சம்பூரிலும் அமைக்கப் பட்டது.வாரத்திற்கு ஒருமுறை வைத்தியர் ஒருவர் வந்து மருந்து கொடுத்து செல்வது வழக்கமாக இருந்தது.ஆனால் 70களில் இந்த நிலமை முற்றாக நிறுத்தப் பட்டது.அந்த கட்டிடமும் இன்று முற்றாக இடிந்து அழிந்து விட்டது.
2011ல் மீண்டும் நிரந்தரமான கிராமிய வைத்தியசாலைஅமைக்கப் பட்டுள்ளது.இன்று அது சிறப்பாக இயங்கி வருகிறது.
No comments:
Post a Comment