செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரின் இலக்கறி(கீரை) வகைகள்-2 ஆரல் இலக்கறி

சேனையூரின் இலக்கறி(கீரை) வகைகள்-2
ஆரல் இலக்கறி
சேனையூரின் வயல் பிரதேசங்களில் கிடைக்கக் கூடியது .வயல் வாய்க்கால் ஒரங்களிலும் குளக் கரைகளிலும் இது வளரும் .தாமரையயை போல தண்ணீரிலேயே இது படர்ந்து இருக்கும் .விரல்களால் கோலி இதனை எடுக்க வேண்டும்.கிட்டத்தட்ட ஆகாயத் தாமரை போன்றது ,ஆகாயத் தாமரை இதழ்கள் அடுக்காக இருக்கும் ,ஆனால் ஆரல் இலைகள் தனி இதழ்களாக இருக்கும்.
ஆரல்ஆணம் (சொதி)
களனித் தண்ணியும் சின்ன இறாலும் போட்டு சமைக்க நல்ல சுவையயிருக்கும்.களனி தண்ணி என்பது சிகப்பு பச்சரிசி கழுவிய தண்ணி.தேங்காய் பால் விட்டு காய்ச்சுவது பொதுவான நடை முறை.
ஆரல் அவியல்
தேங்கஈய் பால் ஆரல் இலக்கறி எதவது ஒரு மணப்பு மீனோ இறாலோ போடலாம்
தின்றா லுரிசைதருந் தீராப் பயித்தியத்தைப்
பொன்றாத நீரிழிவைப் புண்ணீரை -யென்றுமிந்த
ஆராரைச் சாராம லோட்டிவிடு நாலிதழால்
நீராரைக் கீரையது நீ
என (அகத்தியர் குணவாகடம்) கூறும்


No comments:

Post a Comment