செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரின் இலக்கறி(கீரை) வகைகள்-3 முல்லை இலக்கறி

சேனையூரின் இலக்கறி(கீரை) வகைகள்-3
முல்லை இலக்கறி
சங்க இலக்கியம் சொல்லும் முல்லை நிலம் போல சேனையூரும் காடும் காடுசார்ந்த நிலமுமாய் களனிகள் நீண்டு வளத்தின் வாசல்களை கொண்டது.
முல்லை நிலத்தில் முல்லை இல்லாமலா போகும் இரண்டு வகை முல்லை மரங்களை காணலாம் பசு முல்லை,எருமை முல்லை.இரண்டுமே சமைக்க கூடியதுதான்.
பசு முல்லை
இலைகள் மென்மையானவை வாசம் மிக்கவை தண்டுகள் கொடிபோல நீண்டிருக்கும்
எருமை முல்லை
இலைகள் தடிப்பானதாக இருக்கும் வாசம் பெரிதாக இருக்காது.
முல்லை இலக்கறி ஆணம்
முல்லை இலையும் மாங்காயும் தேங்காய் பாலும் சேர்த்து ஆக்க வேணும் மணப்புக்காக குஞ்சுமீன் ,இறால் போட்டு சமைத்தால் .வேறு கறி தேவைப்படாது அதனுடனேயே சாப்பிட்டு எழும்பிரலாம்.

No comments:

Post a Comment