செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரின் இலக்கறி(கீரை) வகைகள்-1 கானாந்தி இலக்கறி

சேனையூரின் இலக்கறி(கீரை) வகைகள்-1
கானாந்தி இலக்கறி
கானாந்தி கீரை கிழக்கு மாகாணக் காடுகளில் ,வயல்களை குளங்களை அண்டிய காடுகளில் இது குறிப்பாக ஆரப்பத்தை எனப்படும் காட்டு வெள்ளம் வழிந்தோடும் பகுதிகளில் செழிப்பாக வளரும்.மழை காலங்களில் துளிர் விட்டு வளர்ந்து காய்த்து பழுக்கும்.வன்னி காடுகளிலும் இருக்க கூடும்.
எங்கள் சேனையூரில் இது மிகுதியாக கிடைக்கும்.நாங்கள் வயல் செய்யும் காலங்களில் அப்புச்சியோடு போகும் போது எங்கள் குளத்து சேனை வயலுக்கு பக்கத்தில் நிறயவே ஆய்ந்து வருவோம்.
வேறு எந்த கீரையிலும் இல்லாத தனிச் சுவை இதிலுண்டு.
கானாந்தியில் மூன்று வகையான கறி வைக்கலாம்.
கானாந்தி சொதி
கானாந்தியும் சிறிய மீன்கள் காரல்,கீரி,திரளி என்பனவும் மாங்காயும் சேர்ந்த சமையல்
கானாந்தி வெள்ளக் கறி
கானாந்தியும் இறாலும் மாங்காயும் போட்டு காய்ச்சும் கறி எலுமிச்சம் புளியும் விடலாம்
கானாந்தி கடையல்
கானாந்தியும் மாங்காயும் போட்டு கடைதல்
எங்கள் வீட்டிலும் ஒரு கானாந்தி மரம் இருந்தது .அதனால் நாங்கள் வருசம் முழுவதும் கானாந்தி கறி சாப்பிடுவோம்.
Like   Comment   

No comments:

Post a Comment