செய்திகள்,வரலாறு,பண்பாடு

Saturday 31 October 2015

சேனையூரும் வர்ண குல மரபும்

சேனையூரும் வர்ண குல மரபும்

 பாலசுகுமார், முன்னாள் கலை கலாசார பீடாதிபதி,கிழக்குப் பல்கலைக்கழகம்

சேனையூரின் மத்தியில் அமைந்திருக்கும் வர்ணகுலப் பிள்ளையார் ஆலயம்,ஒரு குல மரபின் சாட்சியாய் தலை நிமிர்ந்து நிற்கிறது.மனித குல வரலாறு இன்று குல மரபுக் கதைகளுக்கும் இன வரை முறைகளுக்கும்,குடி வழி முறைமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டு வருகிறது.வரலாறு குறித்த வரையறைகள் இன்று மாறியுள்ளன.பொதுமைப் படுத்தப் பட்டு எழுதப் பட்ட முறைமை மாறி குழுக்களின் வரலாறு வட்டார வரலாறு என வகைமைகள் மாறியுள்ளன.வட்டார வரலாறு முக்கியப் பட்டுள்ள இன்றய சூழலில் மானிடவியலாளர் பக்கவத்சலப் பாரதி இப்படி கூறுவார்.
''வட்டார வரலாறுஎன்பது குறிப்பிட்ட புவியியல் பரப்பு சார்ந்தபிராந்தியத்துக்கான வரலாற்றை குறிக்கும்.இதில் எண்ணற்ற வரலாற்று கூறுகள் அடங்கியுள்ளன.இத்தகய வரலாறு இடம் பற்றியதாக இருக்கலாம்,முக்கியத்துவம் கொண்ட ஆறு மலை குளம் பற்றியதாக அமையலாம்,அப்பிரந்தியத்தின் சமூகங்கள் பற்றியதாக இருக்கலாம்,சமூக நாயகர்கள் வரலாற்றில் இடம் பிடித்தவர்கள்,விடுதலை வீரர்கள், மதகுருமார்கள் பற்றியதாக அமையலாம்.கோயில் விழாக்கள் சாமிகள்,வழிபாட்டு மரபுகள்,வீர விளையாட்டுகள்பிற பண்பாட்டு நிகழ்வுகள் பற்றியதாகவும் இருக்கலாம்''
எல்லோரும் தங்கள் மூல வேர்களை தேடி அறிவதில் ஆவலாய் இருப்பர்.அதன் வழியே வர்ணகுலம் பற்றி அறிய முற்ப்பட்ட போது ஆச்சரியத் தக்க தகவல்கள் கிடைத்தன.சேனையூரின் பிரதான குல மரபாக நாம் இனம் காண்பது வர்ண குல மரபே ஆகவே நாம் வர்ணகுல மரபின் மூலத்தை தேடிப் பயணிக்க வேண்டியவர்களாய் உள்ளோம்.
வர்ணகுலம் குருகுலம்,பரதவர்,கரையார்,பரவர்,பெளரவர்,கரவா,பரதர் என வரும் பெயர்கள் ஒரே குலத்தினரை குறிப்பதாகவே உள்ளது என பல்வேறு ஆரச்சியாளர்களின் முடிவாக உள்ளது எம் .டி.ராகவன் போன்ற தொல்லியலாளர்கள்  இதனையே நிறுவுகின்றனர்.
வித்துவான் சோ.க..இராமநாதபிள்ளை எழுதிய ''பரத வம்ச விலாசம்'' என்கிற நூல் வற்ணகுலம் பற்றிய பல தகவல் களை இதிகாசங்களுடனும் புராணங்களுடனும் தொடர்பு படுத்தி சொல்கிறது
''பூர்வ காலத்தில் அஸ்தினாபுரியை ஆண்ட சந்தரவம்ச அரசர்களில் புரூருவன் என்பவரை முதல் தலைமுறையாகக் கொண்டு இருபதாவது தலைமுறையில் தோன்றிய துக்ஷ்யந்த ராஜனிடம் பரதன் என்ற அரசன் தோன்றினான்.
பாகவத புராணம் முதற்பகுதி அத்தியாயம் 21-ம் செய்யுளில், பரதனுக்கு இணையாக இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் என்ற முக்காலத்திலும் மனுநூல் ஆட்சிசெய்த மன்னர் எவருமில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே பரதனின் ஆட்சி காலத்திலிருந்து சந்திர வம்சமானது “ பரதவம்சம் ” என்றும், பரதனின் குலத்தவர் “ பரதவர் ” என்றும் அழைக்கப்படலாயினர்
உவின்சலன்துரை அகராதியில், “பரதவர் நெய்த நில மக்களாகிய மீன்பிடி குலத்தவர், பரதன் என்ற அரசனால் இந்தப் பெயர் வழங்கலாயிற்று,” என்று காணப்படுகிறது.
வீராமுனிவரின் சதுரகராதி, “ பரதவர் நெய்தல் நில மக்கள், ” என்று கூறுகிறது. இலங்கை சுமங்கல சுவாமிகள் இயற்றிய “ ஹித்தியாச வருணநாவ ” என்ற நூலில் பரதர் வம்சத்தினருக்குப் “ “ “ பரவர் ” என்னும் மற்றொரு பெயர் உண்டு என்றும், புதன் மகன் புரூருவனால் “ பெளரவர் ” என்றப் பெயர் பெற்று, வடமொழிச் சொல்லான “ பெளரவ ” என்பதின் தமிழ் வடிவமே “ பரவர் ” என்றும் கூறப்பட்டுள்ளது.
பரதரது பூர்வ சரித்திரம் பாரத இதிகாசத்தில் விஸ்தாரமாய் விவரிக்கப்பட்டுள்ளது. அவ்வம்சத்தின் பாரம்பரிய சரித்திரத்தின் சுருக்கமான வரலாறு கீழ்வருமாறு:
“ முதலில் சந்திரன் என்பவன் புதனைப் பெற்றான். புதன் புரூருவனைப் பெற்றான். புரூருவன் ஊர்வசியுடன் கூடி ஆயு என்பவனைப் பெற்றான். ஆயுவுக்கு நகுடன் பிறந்தான். இந்த நகுடன் அரசாண்ட போது பெற்ற மூன்று ஆண் மக்களில் மூத்த புதல்வன் யயாதி ஆட்சி உரிமை பெற்றான். இந்த யயாதி முதல் துக்ஷ்யந்தன் வரையுள்ள 11 தலைமுறை முறையே:
யயாதி – புரூருவன் – ஜனனேஜயன் – பிரசாவன் – சாயதி – சார்வபெளமன் – அரிசிகன் – மதிவான் – திடன் – நீலன் – துக்ஷ்யந்தன்.
துக்ஷ்யந்தன் மகாராஜனுக்குச் சகுந்தலையிடம் பரதன் பிறந்தான். பரதனின் மகன் பெளமன், இவன் மகன் சுகோத்திரன்; இவன் மகன் அஸ்தன். இந்த அரசனால் ஏற்பட்ட நகரத்துக்கு அஸ்தினாபுரம் என்று பெயர். இவனுக்கு நிகும்பன் பிறந்தான். அவனிடம் அரசமீளி பிறந்தான். அவனுக்கு வருணன் பிறந்தான். வருணனிடம் குரு உற்பவித்தான். இந்தக் குரு அரசனால் பரத வம்சத்தினர் “ கெளரவர் ” என்ற பெயர் பெற்றனர். இவன் யாகஞ் செய்த இடத்திற்கும், அரசாண்ட நாட்டிற்கும், குருக்ஷேத்திரம் என்ற பெயர் வந்தது.
குரு அரசனுக்கு பிரதீபனும், அவனிடம் பிறந்த தேவாபி, சந்தனு என்ற இரு மக்களில் மூத்தவன் தேவாபி காட்டில் தவம் செய்யச் சென்றதால், இளையவன் சந்தனு அரசாள உரிமைப் பெற்றான்.
சந்தனு அரசன் முதலில் கங்கை என்ற பெண்ணை மணந்து பீக்ஷ்மன் என்பவனைப் பெற்றான். பின்னர் பரதவம்சத்தின் திலகனாய் விளங்கிய தாசராஜன் புதல்வியும், வியாசரது தாயுமாகிய சத்தியவதியை மணந்து, சித்திராங்கதன் – சித்திரவீரியன் என்ற இரு புதல்வர்களைப் பெற்றான். சித்திராங்கதன் இளமையிலேயே இறந்ததால், சித்திரவீரியனுக்கு காசிராஜனின் இரு புதல்விகளையும் திருமணம் செய்விக்கப்பட்டு முடியுஞ் சூட்டப்பட்டது. இவன் மக்கட்பேறு இல்லாது இறக்கவே, இவனது மனைவிகளிடம் வியாசர் கூடி திருதராக்ஷடிரன் – பாண்டு என்று இரு புதல்வர்களைப் பெற்றார். திருதராக்ஷடிரனுக்கு துரியோதனன் முதலிய நூற்றுவர் பிள்ளைகளாவர். பாண்டுவுக்கு யுதிக்ஷ்டிரன் முதலிய வர் பிள்ளைகளாவர்.
இந்த நூற்றுவர் மற்றுமஅவர் காலத்தில்தான் மகாபாரத யுத்தம் நடந்தது. கூர்ச்சாத்து அரசனான கிருக்ஷ்ணன் பாண்டவர்கட்கு உதவி செய்ததால், பாண்டவரே யுத்தத்தில் வென்றனர்.
கிறிஸ்து பிறப்பதற்கு ஏறத்தாழ 4400 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது தான் இந்த மகாபாரத யுத்தம். இதற்கு பிறகும் , சில காலம் பரத அரசாட்சி அஸ்தினாபுரத்தில் நிலைத்து வந்தது''
''மேற்கூறிய சந்திர வம்சத்தினரான பரதரும், மதுராபுரியை ஆண்டு வந்த பாண்டியரும் ஒரே வம்சத்தினர் என்று ,வில்லிபாரதம் கன்னபருவம் 17-ம் நாள் போர்புரிச் சுருக்கம் 106-ம் செய்யுளில் கூறப்பட்டுள்ளது
பரதரின் தலைநகரான அஸ்தினாபுரியிலிருந்து பாண்டுவின் புதல்வர்கள் வரில் அருச்சுனன் தீர்த்தயாத்திரை செய்தபோது, மதுக்கரை (மதுரை) க்கு அடுத்த பூழி என்ற மணலிபுரத்தை அடைந்து, அங்க ஆட்சி செய்த சித்திரவாகு பாண்டியனின் ஏக புதல்வியை கண்டு அவளை மணங்கொள்ள விரும்பினான். மன்னன் பாண்டியன் தன் மகள் வயிற்றில் பிறக்கும் குழந்தையை மதுரை அரசாட்சிக்கு உரியதாக்கும் பட்சத்தில், அருச்சுனன் விருப்பத்திற்கு உடன்பாடு தெரிவித்தான். அருச்சுனன் சித்திரவாகு பாண்டியன் மகள் சித்திராங்கதையை மணந்து, பப்புருவாகனன் என்ற மகனை பெற்றுப் பாண்டியனிடம் ஒப்படைத்து, மனைவி சித்திரங்காதையுடன் சென்றான்.”
கி.பி.1735-ம் ஆண்டு தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட வேத அகராதியில், பூரு என்னும் அரசன் முதல் கூன் பாண்டியன் வரை மொத்தம் 364 பாண்டியர்கள் இருந்தார்கள் என்று கூறப்படுகிறது.
அருணாசலப் புராணம் வச்சிராங்கத பாண்டியன் சருக்கம் 411-ம் செய்யுளில் கூறப்பட்டது போல, பரத வம்சமும் பாண்டிய வம்சமும் ஒன்று என எவர்க்கும் நன்கு புலப்படும்.
காசி செட்டித்துரை எழுதிய கெஜற்றியர் என்ற ஆங்கில நூலிலும் இதுதான் கூறப்பட்டுள்ளது.
பரத குலத்தவர்க்கு உரிய கொடிகள் 211-ல் மீன் கொடியும் ஒன்று. பாண்டியனுக்கு உரிய கொடியும் மீன் கொடியாகையால், பரதவரே பாண்டியர் என்று அவர்களது துவஜம் (அதாவது, கொடி) சாட்சி பகருகின்றது.
நெய்தல் நிலத் தலைவனே கடற்சேர்ப்பன் என்றும், அவனே பாண்டியன் என்றும், அவனது குலத்தவரே பரதவர் என்றும் சூடாமணி நிகண்டு மக்கட் பெயர்த் தொகுதியிலும் , நாலடியார் – பழமொழி முதலிய சங்கச் செய்யுட்களிலும் கூறப்படுகின்றது.
வீரமாமுனிவர், வின்ஸ்லோ துரை இவர்களின் அகராதிகளில் , நெய்தல் நில மக்களைப் பரதர் என்று காணப்படுகின்றது. எனவே, பரத குலமே பாண்டிய குலமென மயக்கமின்றி தெளிவாகும்.
பரத வம்சத்தைப் பற்றிய மற்றொரு வரலாறு, பதினெட்டுப் புராணத்தில் ஒன்றான பிரமபுராணத்தின் மூன்றாவது காண்டத்தில் கூறப்பட்டுள்ளது. அது:
“சக்கரபுரிப் பட்டணத்தில் அரசாண்டு வந்த சுரா பாண்டியன் என்பவனின் புதல்வன் அமிர்தபாண்டியன். இவனுக்குப் பிறந்த ஏழு பிள்ளைகளில் மூத்தவன் காந்தவீரிய பாண்டியன். இந்த அரசன் தனது சகோதரர்களுடன் வேட்டையாட காட்டிற்குச் சென்றபோது களைப்புற்றதால், தனது தம்பியான குலசேகர பாண்டியனை தாகத்திற்கு தண்ணீர் கொண்டுவரப் பணித்தான். தண்ணீர் கொணர்வதில் கால தாமதஞ் செய்த தம்பிமீது சினங்கொண்டு, அவனை தங்களை விட்டு நீங்குமாறு கட்டளையிட்டான். அக்கட்டளையின்படி, குலசேகர பாண்டியன் தென் பகுதியில் மணவூர் என்னும் இடத்தில் உள்ள சமணராஜன் நகரில் மீன் பிடித்து விற்று ஜீவனம் செய்து வந்தான். இதையறிந்த சமணராஜன் தனது புதல்வி சுலோதையம்மாளை குலசேகர பாண்டியனுக்கு மணமுடித்து, ஆண் சந்ததியில்லாத தனது ராச்சியத்தையும் அவனுக்கே அளித்து ராஜபட்டம் சூட்டுவித்தான். குலசேகர பாண்டியன் மீன்பிடி தொழில் புரிந்தமையால், மீன்கொடி கட்டிச் சந்திர குலத்திற்கு அரசனாய் இருந்து, தனது வம்சத்திற்குரிய பாண்டியன் என்ற பெயர் பெற்று விளங்கினான்.”
மானிடவியல் அறிஞர் *எட்கர் தர்ஸ்டன்* அவர்கள் தான் எழுதிய *“தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்”* (”Castes and Tribes of South India”-(Edgar Thurston – 1909))என்ற ஆய்வு நூலில், *“பரவன்”* (Paravan) என்ற குலத்திற்குரிய மானுட வாழ்வின் பிறப்பு, இறப்பு, கல்வி, வழிபாட்டுச் சடங்குகள், திருமணம், ஆட்சியியல் நிலை ஆகியவற்றை நன்கு ஆராய்ந்து விளக்கியுள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழக நூலகக் குழுவின் தலைவரான எட்கர் தர்ஸ்டன், 1885-ல் சென்னை அருங்காட்சியகப் பொறுப்பாளராகவும் பணியாற்றினார். மேற்கூறிய நூலின் தமிழாக்கம் ,
தென் கிழக்குக் கடற்கரையைச் சார்ந்த “பரவர்”, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கடற்கரையில் உள்ள துறைமுகப் பட்டணங்களிலும் இலங்கையின் வடமேற்குக் கடற்கரை மாநிலங்களிலும் காணப்படுகின்றனர்.
பரவரின் தோற்றம் பற்றி வழங்கிவரும் வரலாறுகள், *சைமன் காசி செட்டி* எழுதிய *“பரவர்களின் தோற்றமும் வரலாறும்”* என்ற கட்டுரையில் (Origin and History of the Paravars by Simon Casie Chitty – 1873 Journal Roy.As.Soc.IV) கீழ் கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
1) 1735-ல் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட *“கிறிஸ்தவ திருச்சபையின் வரலாற்றின்“* ( The Historia Ecclesiastica) ஆசிரியர், பரவர்களை மறைநூல்களில் கூறப்பட்டுள்ள பர்வையம்கள் (Parvaim of the Scriptures) என்று வகைப்படுத்துகிறார். மேலும் பரவர்கள் , சாலமன் அரசர்(King Solomon) காலத்தில் கடற்பயணங்கள் மேற்கொள்வதில் புகழ் பெற்றவர்கள் என்றும் கூறுகிறார்.
2) பரவர்கள் தங்களை *அயோத்தி*யினைச் (Ayodhya) சேர்ந்தவர்கள் எனவும் , மகாபாரதப் போர் நிகழ்வதற்கு முன்னர் யமுனைக் கரையில் வாழ்ந்து வந்ததாகவும் கூறிக்கொள்வார்கள்.
3) பரவர்களிடையே அவர்களது தோற்றம் பற்றிய பல வரலாறுகள் புராணக் கதைகளோடு தொடர்புடையனவாக காணப்படுகிறது.
பரவர்கள் தங்களைக் கடல் தெய்வமான *வருணனின்* வழிவந்தவர்கள் எனக் கூறிக்கொள்வதோடு, சிவன் அசுரர்களை வெல்லப் போர்க்கடவுளான கார்த்திகேயனைப் படைத்தபொழுது சரவணப்பொய்கையிலிருந்து அவனுடன் கூடத் தோன்றிய கார்த்திகைப் பெண்களால் அவனைப் போலவே வளர்க்கப்பட்டவர்கள் என்றும் கூறிக்கொள்கிறார்கள். கடந்த யுகத்தின் முடிவில் உலகம் முழுவதும் நீரால் மூடப்பட்டு மூழ்கிய போது பரவர்கள் ஒரு தோணியினைக் கட்டியதாகவும், அதில் ஏறிக்கொண்டு பேரழிவிலிருந்து தப்பியதாகவும், பின்னர் நீர்வற்றி மீண்டும் நிலம் புலப்பட்டு தங்களது தோணி தரைதட்டியபோது, அந்த இடத்தில் குடியமர்ந்து அதற்கு *தோணிபுரம்* எனப் பெயரிட்டதாகவும் கூறப்படுகின்றன.
4) பரவர்கள் ஒரு காலத்தில் செல்வாக்கு உடையவர்களாகவும், கடற்பயணம் பற்றிய தங்களது அறிவின்காரணமாக மற்றச் சாதியர் மீது அதிகாரம் செலுத்துபவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்களுள் *“ஆதியரசன்”* என்ற பட்டப்பெயர் கொண்ட அரச வம்சம் இருந்துள்ளதாகவும், அதில் சிலர் *“மங்கை”* என்ற பெயருள்ள நகரிலிருந்து ஆண்டதாகவும், இந்நாளில் அது *“உத்தரகோசமங்கை”* என்ற பெயருடன் இராமநாதபுரம் அருகே விளங்குவதாகவும் கூறப்படுகின்றது.
5) *“வலைவீசு புராணம்”* என்ற புராணத்தில் பின்வரும் கதை கூறப்பட்டுள்ளது. சிவனின் மனைவி பார்வதியும் மகன் கார்த்திகேயனும் சொல்லக்கூடாத சில இரகசியங்களை வெளியிட்டதால் தேவலோகத்திலிருந்து வெளியேறும்படி பணிக்கப்பட்டனர். அவர்கள் பல மானிட பிறவிகள் எடுத்த பிறகே மீண்டும் தேவலோகத்தில் அனுமதிக்கப்படலாம் எனச் சாபம் பெற்றனர். பார்வதியின் வேண்டுகோளுக்கு இணங்கிய சிவன், அவர்கள் குற்றத்திற்கு தண்டனையாக ஒரு மானிட பிறவி மட்டும் எடுத்தால் போதுமானது என்று அவர்களுக்கான தண்டனையைக் குறைத்தார்.
இந்த வேளையில் பரவனின் அரசன் *திரியம்பகனும்* (Triambaka) அவனது மனைவி *வருணவள்ளியும்* (Varuna Valli) புத்திரப்பாக்கியத்திற்காக தவம் புரிந்து கொண்டிருந்த படியால், பார்வதி அவர்களுடைய மகளாகப் பிறந்து திரைசேர்மடந்தை (Tiryser Madente) என்று பெயரிடப்பட்டாள். கார்த்திகேயன் ஒரு மீனாக உருவெடுத்தான்.
வடகடலில் மீனாகத் திரிந்துகொண்டிருந்த கார்த்திகேயன், மிகப்பெரிய மீனாக வளர்ந்து தென் கடலுக்கு வந்து, பரவர்களின் மீன்பிடிக் கலங்களையெல்லாம் தாக்கி வந்தான். பரவர்களின் தொழில் சீரழிந்து வருவதை பரவர்களின் அரசன் *“திரியம்பகனன்”* , அந்த மீனைப் பிடிப்பவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்குத் தனது மகளை மணம்முடித்துத் தருவதாக அறிக்கையிட்டார்.
அப்போது சிவன், ஒரு பரவனாக உருவெடுத்து அந்த மீனைப் பிடித்து, அரசனின் மகள் *“திரைசேர்மடந்தை”* என்ற பெயரில் உள்ள தனது மனைவியான பார்வதியை மணந்துகொண்டான்.
6) மகாபாரதத்தின் *“ஆதிபருவம்”* (Adiparva) என்ற பகுதியில் , பரவனின் அரசன் யமுனைக் கரையில் அரசாண்டதாகவும் ஒரு மீனின் வயிற்றிலிருந்து ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்ததாகவும் , அவளுக்கு “மச்சகந்தி” (Machchakindi) எனப் பெயரிட்டு தனது மகளாக வளர்த்ததாகவும், அவள் பருவம் அடைந்தபின் குலவழக்கப்படி பரவப் பெண்களோடு சேர்ந்து ஆற்றின் குறுக்கே பரிசலோட்டிப் பயணிகளை மறுகரை சேர்க்கும் பணியினை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஒருநாள் *“பராசர முனிவர்”* (Parasara Sage) பரிசல் துறையில் மச்சகந்தியை கண்டு காதல் கொள்ள, அவள் கறுவுற்று ஈன்ற குழந்தைதான் புராணங்கள் பலவற்றை இயற்றிய புகழ்பெற்ற *“வியாசர்”* (Viyasar)ஆவார். பின்னர் மச்சகந்தியின் அழகில் மோகங்கொண்ட சந்திர குல மன்னனான *“சந்தனு”* (King Santanu of Lunar Race) அவளை தன் மனைவியாக ஏற்று, பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் மூதாதையான *“விசித்திரவீரியனை”* (Vichitravirya) பெற்றெடுத்தாள். அஸ்தினாபுர அரசுக்கு உரிமை கொண்டாட நடத்தப்பட்ட பெரும் போரே மகாபாரத இதிகாசத்தின் மூலக் கருவாகும். இதனால்தான் பரவர்கள் தங்களைச் *“சந்திர குலத்தவர்”* என்று கூறிக்கொள்வார்கள். மேலும் தங்களது திருமண விருந்தினில் சந்திர குலச் சின்னங்களையும் கொடிகளையும் காட்சிப்பொருளாக ஏற்றி வைக்கின்றனர்
7) இலங்கையின் வடமேற்குக் கரையில் உள்ள *“குதிரைமலை”* (Kudremalle)யில் அரசாண்ட *“அல்லியரசாணி”* (Alliarasany) பற்றி நடத்தப்படும் நாடகத்தில் , பரவர்கள் ஒரு முதன்மைப் பாத்திரத்தில் பங்கெடுக்கின்றனர். கடற்கரையில் முத்தெடுக்க பரவர்களை அந்த அரசி பணியில் அமர்த்தியதாகவும், ஒவ்வொரு முத்துக்குளிப்பிலும் பத்துக்கலம் முத்தினை அரசிக்கு பரவர்கள் தரவேண்டும் என்ற விதிமுறை கொண்டிருந்ததாகவும் நாடகத்தில் கூறப்படுகின்றது.
8) *1871 சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கை*யின் படி “பரவர்கள் மதுரை, திருநெல்வேலிக் கடற்கரைச் சார்ந்த மீனவர்கள் ஆவார்கள். இவர்கள் போர்த்துக்கீசியர் இந்தியாவிற்கு வந்தபோது முகமதியர்களின் அடக்கு முறையில் சிக்கித்தவித்தனர். இதனைக் கண்ட போர்த்துக்கீசியர் இவர்கள் கிறிஸ்த்தவர்களாக மதம் மாறினால் அவர்களுக்கு உதவுவதாகக் கூறியதால், அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் தென்கிழக்குக் கடற்கரையினைச் சேர்ந்தவர்களில் பலர் ரோமன கிறிஸ்த்தவர்களாக மதம்மாற காரணமானது.”
அதே அறிக்கையில், *திரு. எஸ். பி. றைஸ்* (S.P. Rice – Occasional Essays on Native South Indian Life, 1901) இந்த மீனவர்களைப் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
” தென் கோடியில் வாழும் இந்த மீனவர்கள் மிகவும் பக்தியுள்ள கத்தோலிக்கர்கள் ஆவார்கள். இவர்கள் தங்களது முன்னோர்கள் மதம் மாறிய போது அவர்களுக்கு வைக்கப்பட்ட போர்த்துக்கீசிய *“ஜோஸ்ப் பர்னான்டோ மற்றும் மரிய சந்தியாகு”* (Jose Fernandez and Maria Santiago)போன்ற பெயர்களை இன்றும் தாங்கியவர்களாக இருந்தாலும், நேரில் காணும்போது இடையில் கழுத்தில் கன்னி மேரியின் படங்கொண்ட உத்தரியம் அணிந்தவர்களாக காட்சியளித்து பழங்கால முறைப்படி மீன்பிடிக்கும் சாமானியர்கள், என்பது ஒப்புக் கொள்ளமுடியாத ஒரு செய்தியாகும்.”
9) *1901 சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கை* (Madras Census Report 1901) பரவர்களைப் பற்றி கூறுவதாவது
” பரவன் என்ற பெயருக்குரியனவாக முறையே தமிழ், மலையாளம், கன்னடம் பேசும் மூன்று சாதிகள் உள்ளன. இந்த மூன்று பிரிவினருமே தமிழ் பேசும் *பரவன் அல்லது பரதவர்களின்* வழித்தோன்றல்களாக இருக்கலாம்.
*தமிழ் பரவர்கள்* கடற்கரையோர மீனவர்களாகும். இவர்களின் தலைமையிடம் தூத்துக்குடி. தலைவன் என்றொருவன் அவர்களை ஆட்சிப்புரிவான். இவர்களில் பெரும்பாலோர் பாரம்பரியக் கிறிஸ்த்தவர்கள். தங்களைப் பாண்டியர் குலத்தைச் சேர்ந்த *சத்திரியர்* எனக் கூறிக்கொள்ளும் இவர்கள் பிராமணர்கள் இல்லத்தில் மட்டுமே உணவு உண்பர்.
*மலையாளப் பரவர்கள்* கிளிஞ்சல் பொறுக்குதல், சுண்ணாம்புக் காளவாய் போடுதல், உடற்பயிற்சி ஆகியவற்றில் ஈடுபடுவார்கள்; இவர்கள் வீட்டுப் பெண்கள் மகப்பேறு பார்க்கும் மருத்துவச்சிகளாக இருப்பார்கள். இவர்களின் பட்டப்பெயர்கள் *குருப்பு, வாரக்குருப்பு, நூறன் குருப்பு* (Kurup, Varakurup, Nurankurup)ஆகியவனாகும்.
*கன்னடப் பரவர்கள்* குடைகட்டிகளாகத் தொழில் செய்வதோடு பூத ஆட்டக்காரர்களாகவும் விளங்குகின்றனர்.
மேலும் மேற்குக் கடற்கரையில் வாழும் பரவர்கள், முகமதியரின் கொடுமைகளிலிருந்து தப்பிக்க திருநெல்வேலியிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
10) *மன்னார் வளைகுடாவில் இந்தியர்கள் முத்துக்குளித்தல் தொடர்பான அறிக்கையில்* (Report of the Indian Pearl Fisheries in the gulf of manner 1905) திரு. ஜெ. ஹெர்னெல்(J.Hornell), மன்னார் வளைகுடாவின் இந்தியக் கடற்கரை சார்ந்து வாழ்கின்ற பரவர்களின் வரலாறு பற்றியும், முத்துக்குளித்தலோடு அவர்கள் கொண்ட தொடர்பு பற்றியும் பல தகவல்களை தந்துள்ளார். அவை:
“ முத்துக்குளிக்கும் தொழில் நினைவுக்கு எட்டாத காலந்தொட்டு, பரவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருவதாக வழக்குவரலாறு தெரிவிக்கின்றது. கி.மு. முதல் ஆண்டுகள் தொடர்ந்து மதுரை,திருநெல்வேலி மாவட்டங்கள் என்று இன்று வழங்கப்படும் பகுதி தமிழர்களுக்குரிய பாண்டியப் பேரரசாக இருந்து வந்திருக்கின்றது என்பது தெரிந்த செய்தியாகும். பழைய தமிழ் நூலான *‘கல்வேடு’* (kalvedu) என்ற நூலில், பாண்டிய மன்னனுக்கும் முத்துக்குளிக்கும் பரவர்களுக்கும் இடையேயான உறவு பற்றிய குறிப்பு கீழ்க்கண்டவாறு காணப்படுகின்றது
*வேதநாராயணன் செட்டியும்* (VidanarayanenCheddi) முத்துக்குளிக்கும் பரவர்களும் மதுரையை ஆண்டுவந்த *பாண்டியன்* மகளான *அல்லியரசாணிக்கு* (Alliyarasani) கப்பம் செலுத்தி வந்தனர். அவள் கடலில் பயணம்போன போது அவர்களது கப்பல் புயலில் அகப்பட்டு, இலங்கையின் கரையில் ஒதுங்க, அங்கு அவர்கள் *கரைநேர்கை, குதிரைமலை* (Karainerkai and Kutiraimalai) ஆகிய இடங்களைக் கண்டனர். வேதநாராயணன் செட்டி தனது கப்பலில் இருந்த செல்வம் முழுவதையும் அங்கேகொண்டு சேர்க்க பரவர் உதவியை நாடினார்.கடலிகிலபம்,கல்லக்கிலபம்(Kadalihilapam,Kallachihilapam) ஆகிய துறைகளில் பரவர்கள் முத்துக்குளிக்க ஏற்பாடுகள் செய்வதோடு, இரும்பைப் பொன்னாக்கும் இரசவாதத்திற்கு உதவும் மரங்களையும் அங்கிருந்து கொண்டுவந்தான்
கொற்கையில்(Korkai) பரவர்கள் மிகுந்த செல்வாக்கு உடையவர்களாக விளங்கினர் என்று மதுரைக்காஞ்சி(Madurai Kanchi) தெரிவிக்கின்றது. மீனை உணவாகக் கொள்ளும் பரவர்கள் வில்லையேந்தி கூட்டமாகத் திரிந்து, பகைவர்களைத் தங்களுடைய புறங்காட்டாத வீரச்செயல்களால் அச்சுறுத்தி வந்தனர். பரவர் நாட்டின் முக்கியப் பட்டணம் கொற்கை என்றும், அங்கு முத்துக்குளிப்பவர்களும் சங்கு அறுப்பவர்களுமே பெறும் அளவில் வாழ்கின்றனர் என்றும் , மதுரைக்காஞ்சி தெரிவிக்கின்றது
பாண்டியர் அரசு வலிமைவாய்ந்ததாக இருந்த காலத்தில், பரவர்கள் அரசரிடமிருந்து பாதுகாப்பினையும் வரிவிலக்கினையும் பெற்று வந்தனர்.”
. ‘’தமிழ் நாட்டில் ஆதி வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த பல்வேறு சமூகக் குழுக்களுள் ஒன்று வேளிர் என்ற குழு. இன்னொன்று பரதர் என்ற குழு.இக்குழுக்களைச் சார்ந்தோர் ஆதி வரலாற்றுக்க்காலத்தில் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்ததற்கான சான்றுகள் கல்வெட்டுச் சான்றுகளும் தொல்லியல் சான்றுகளும் உள்ளன என்பதை பேராசிரியர் ஸெனெவிரத்ன எட்டுத்துறைத்துள்ளார்// ( கா.இந்திரபாலா- இலங்கையில் தமிழர் - ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு) மேலும் பரதர் என்ற குழுவினர் சங்கச் செய்யுள்களில் பல முறை குறிப்பிடப்பட்டுள்ளனர். தமிழக கரையோரப்பட்டினங்களில் இவர்கள் கடல்சார் தொழில் புரிவோராகவும் வணிகராகவும் செல்வாக்குப் பெற்றிருந்தனர் (( கா.இந்திரபாலா- இலங்கையில் தமிழர் - ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு) ) நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்களை சங்க இலக்கியங்கள் ‘பரதவர்” என்று அடையாளப்படுத்துகின்றன. ஐந்து வகை திணைகளாக வகுக்கப்பட்ட நிலங்களில் நெய்தல் நிலத்தின் திணைக்குரிய தலை மக்களாக ஆண்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர்கள் சேர்ப்பன், புலம்பன், கொண்கன், துறைவன், ஆகியோரும் பெண்களாக பரத்தி, நுளைச்சி என்றும் குறிக்கின்றன.
நெய்தல் நிலத்திற்குரிய மக்களாக ஆண்கள் பரதர், நுளையர், அளவர் பெண்களாக நுளைச்சியர் பரத்தியர், அளத்தியர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர். உப்பு வணிகம் செய்தவர்களை உமணர் என்கிறது சங்கப்பாடல்கள். மீனவர்களில் ஒரு பிரிவினரான நுளையர் என்ற பெயர் அகநானூற்றிலும் திமிலர் என்ற பெயர் மதுரைக் காஞ்சியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பரதவர் என்ற பெயர்தான் பெரும்பாலான சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. பரதவர்கள் காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்ததாக பட்டினப்பாலை கூறுகிறது.
புறநானூறு - //திண் திமில் பரதர்// ( உறுதி மிக்க படகையாளும் பரதவர்) பட்டினப்பாலை - //புன் தலை இரும்பரதவர்// (உப்பு நீர் படுவதால் பழுப்பேறிய தலைமுடியைக் கொண்ட வலிமைமிக்க பரதவர்) நுண் வலைப் பரதவர், பெருங்கடல் பரதவர், பழந்திமில் கொன்ற பரதவர், வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர், ’உரைசால் சிறப்பின் அரசுவிழை திருவின் பரதவர் மலிந்த பயங்கொழு மாநகர்” ( மனையறம் படுத்த காதை) ’’அரச குமாரரும் பரவ குமாரரும்” (இந்திர விழா ஊர் எடுத்த காதை) அரசர் முறையோ பரதர் முறையோ” இந்தப் பாடல்கள் பரதவருக்கும் கடலுக்கும் உழைப்பிற்குமான தொடர்பை நமக்குக் காட்டும் சித்திரங்கள் இவை, பரதவர்கள் சங்ககாலத்திலும் அதன் பின்னரும் மீனவர்களாக, முத்துக்குளிப்போர்களாக, வணிகர்களாக, சிற்றரசர்களாக, படைத்தலைவர்களாக, எதிரிப்படைகளில் பங்கு கொண்டவர்காளாக வரலாற்றில் வாழ்ந்துள்ளனர் என்பதற்கான் ஆதாரமாக ஏராளமான பாடல்கள் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன. பாண்டியர்களின் பண்டைத் தலைநகரான கொற்கையும், கோவலன் கண்ணகி கதையும், காவிரிப்பூம்பட்டினமுமாக செல்வத்தோடும் செல்வாக்கோடும் வாழ்ந்த சமூகங்களில் பரதவர்களும் பிரதானமானவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் இவை. இந்த பரதவர்கள் வரலாற்றில் யாருங்கும் அடங்காமல் செருக்கோடு வாழ்ந்ததும் சில நேரங்களில் சோழர்கள் இவர்கள் மீது படையெடுத்தமையும் பல நேரங்களில் நாடு பிடிக்கும் ஆசையோடு கடல் கடந்த போது பரதவர் துணையோடு போர் புரிந்தமைக்கான சான்றுகளும் உள்ளன. ‘தென்பரதர் மிடல் சாய வட வடுகர் வாள் ஒட்டி” என்கிற புறநானூற்றுப் பாடல் மூலம் அவர்கள் பாண்டியர்களின் ஆளுகைக்குட்படாத தனி இனக்குழுவாக பிரத்தியேக ஆட்சி முறையை நடத்தியிருக்கிறார்கள் என்பதும் அவர்களை பாண்டியர்கள் போர் செய்து வென்றதையும் உணர்த்துகிறது. சிலப்பதிகார காலத்திற்குப் பிந்தைய மதுரைக்காஞ்சியில் பாண்டியர்கள் பெரும்படை திரட்டி பரதவர்களோடு போர் புரிந்ததை ‘’தென் பரதர் போர் ஏறே” என்கிற பாடல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. நிலத்தை ஐந்து வகை திணையாகப் பிரித்து இந் நிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையினை பட்டியலிட்டது சங்ககாலம். பின்னர் பேரரசுகளின் விரிவு வெளிநாட்டு ஆதிக்கத்தின் இடையீடு பிராமணீயத்தின் செல்வாக்கு, ஆகியவற்றின் காராணமாக மருத நிலம் தவிர்த்த ஏனைய நிலங்கள் படிப்படியாக மறைந்து பின்னில்லைக்குச் சென்றன என்கிறார் -பேராசிரியர் சிவத்தம்பி. (நூல்- பண்டைத் தமிழ்ச் சமூகம்) தமிழகத்தின் மிக தொன்மையான பல சமூகங்கள் வரலாற்றுப் போக்கில் சாதி ரீதியாக தங்களை மேன்மைப்படுத்தும் போக்கை நீண்ட காலமாக செய்து வருகின்ற நிலையில் ஒரு சமூகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் அசைவியக்கத்தை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவது அவ்வளவு எளிமையான ஒன்றல்ல, தமிழ் சமூகத்தில் வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டு வாழ்ந்து வரும் கடலோரச் சமூகங்களில் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் சமூகம் பரவர். இன்றைக்கு பரதவர் என்ற பெயரில் இராமேஸ்வரம் தொடங்கி கன்னியாகுமரி வரை வங்கக்கடலோரத்திலும், கன்னியாகுமரி தொடங்கி கேரளக் கரையோரங்களிலும் இலங்கை கரையோரங்களிலும் வாழ்கிறார்கள் இவர்கள். பரவர் அல்லது பரதவர் என்பது தற்காலத்தில் சாதிப் பெயராக அடையாளம் காணப்பட்டாலும் அது சாதிப் பெயர் அல்ல பண்டை இலக்கியங்களில் நெய்தல் என்னும் திணையின் தலைவர்களாக வருகிறவர்களே இந்த பரவர்கள். பரதவர்களில் பல சாதிகள் இன்று தங்களை சைவ மரபினராக மாற்றிக் கொண்டுள்ளனர். காலம் தோறும் ஒடுக்கப்பட்ட சமூங்களை தூய்மைப்படுத்திக் கொள்ளவும் மேன் மக்களாக காட்டிக் கொள்ளவும் பிற இழிந்த சாதியினரை விட தாங்கள் மேலானவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளவும் மரபை மாற்றிக் கொள்வதுண்டு. அந்த வகையில் உப்பு வணிகத்தோடு தொடர்புடைய நெய்தல் நில மக்களை நாட்டுக்கோட்டை செட்டியார்கள் என்று சொல்கிறவர்களும் உண்டு. இவர்கள் உமணர்கள் என்றும் வணிக உமணர்கள் என்றும் சில குறிப்புகளும் ஆய்வுகளும் சொல்கின்றன. பொதுவாக இன்றைக்கு செட்டியார்கள் என்றழைக்கப்படுவோரிடம் மீன் பிடிச் சமூகங்களின் எச்சங்கள் இருக்கிறthu. சங்க இலக்கியங்கள் செட்டி என்றும் மாசத்துவன் என்றும் குறிப்பிடும் செட்டிகள் Paravar, கடல் வணிகத்தில் ஈடுபட்டவர்கள் என்பதற்கான ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இப்போதும் பரதவர்களிலும். காலப்போக்கில் நிலம் மறைந்து சாதிகள் ஆக்கம் பெற்ற போது பல சாதிகள் தங்களை சைவமாக மாற்றிக் கொண்டன அப்படித்தான் செட்டிகள் செட்டியார்கள் ஆகியிருக்கலாம். எட்கர் தர்ஸ்டனின் பரவன் பற்றிய குறிப்புகள். இன்னொரு கதை பரதவர்கள் தங்களை அயோத்தியைச் சார்ந்தவர்கள் என்றும் மகாபாரதப் போருக்கு முன்னர் யமுனைக்கரையில் வாழ்ந்ததாகவும் கூறிக் கொள்கின்றனர். சூத்திரப் பெண் ஒருத்திக்கு பிராமணன் வாயிலாக வந்தவர்கள் என்றும் இலங்கையில் இவர்கள் இராமனால் குடியமர்த்தப்பட்ட குகன் மரபினர் என்றும் தங்களை அழைத்துக் கொள்கிறார்காள். சென்ற யுகத்தின் முடிவில் உலகம் நீரால் சூழப்பட்டிருந்த போது தங்களைக் காத்துக் கொள்ளும் விதமாக ஒரு தோணியைச் செய்து அதில் ஏறி பயணப்பட்டு பின்னர் நீர்வற்றி தரை தட்டிய போது தாங்கள் குடியேறியதுதான் தோணிபுரம் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கதைகள் ///எவற்றுக்கும் ஆதாரங்கள் எதுவும் கிடையாது. இவைகள் பழமரபுக் கதைகளாகவோ புரானக்கதைகளாகவோ காலந்தோறும் மக்களிடையே வழங்கிவருகின்றன. ஒரு காலத்தில் பரவர் செல்வாக்குடையோராகவும் கடற்பயணம் பற்றியதான தங்கள் அறிவின் காரணமாக அவர்கள் மற்ற சாதியார் மீது செல்வாக்குச் செலுத்துவோராகவும் இருந்துள்ளனர். இவர்களுள் சிலர் ஆதிரயரசர்கள் என்ற பெயரில் ஆண்டுள்ளதாகவும் தெரிகிறது. இவர்களுள் சிலர் உத்திரகோசமங்கையிலிருந்து ஆண்டதாகவும், அந்நாட்களில் கடலோரப்பட்டினமான இந்த நகரம் மங்கை என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இராமநாதபுரத்திற்கு அருகே உள்ள புகழ்பெற்ற இந்துக் கோவிலாக இன்று அது திகழ்கிறது// (எட்கர் தர்ஸ்டன்- தென்னிந்திய குலங்களும் குடிகளும், தொகுதி ஆறு ) இது போக வலைவீசு புராணத்தில் சிவன் பார்வதி தொடர்புடைய கதையொன்றும். 1912-ல் வெளிவந்த மேல் மலையனூர் வீரப்பதாசனார் எழுதிய ஆதி ஆதி ஐதீக புராணத்தில் பரதவர்களின் தொண்ணூறு மரபுகளை பட்டியிலிடுகிறது. (பரதவர் -அரு. பரமசிவம் -காவ்யா வெளியீடு)இதெல்லாம் இன்றைய காலச் சூழலில் ஒவ்வாது என்னும் நிலையில்,1901-ல் சென்னை மாநில சாதிக் கணக்கெடுப்பில் // பரவன் என்பவன் முறையே தமிழ், மலையாளம், கன்னடம் ஆகினவற்றைப் பேசும் மூன்று சாதிகளாக உள்ளனர். இந்த மூன்று பிரிவினருமே தமிழ் பேசும் பரவன் அல்லது பரதவனின் வழித்தோன்றல்களே....இவர்களின் தலைமையிடம் தூத்துக்குடி ஆகும். (தென்னிந்திய குலங்களும் குடிகளும்-தொகுதி ஆறு) ஆனால் தூத்துக்குடி என்பது பரதவர்களின் பிற்கால தலைநகர்தான் பண்டையில் அவர்களின் பிரதான நகராக இருந்தது கொற்கை அது கடல் சார்ந்த இயற்கைப் பேரிடரில் பெரும் அழிவுற்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நினைவுக்கு எட்டிய காலத்திற்கு முன்பிருந்தே முத்துக்குளித்தல் தொழில் உரிமை பரவர்களிடமிருந்தது. பழைய தமிழ் நூலான கலவேடு என்ற நூலில் பாண்டிய மன்னனுக்கும் முத்துக்குளிக்கும் பரவருக்கும் இடையேயான உறவு பற்றிய குறிப்பு காணப்படுகிறது. வேத நாராயணன் செட்டியும் முத்துக்குழிக்கும் பரவரும் மதுரையை ஆண்ட பாண்டியன் மகளான அல்லியராசானிக்கு கப்பம் செலுத்தி வந்தனர் என்கிறது அந்தக் குறிப்பு. அல்லியராசானி அவள் கப்பலில் பயணம் மேற்கொண்டிருந்த போது புயலில் அகப்பட்டு இலங்கையில் சென்று ஒதுக்கினாள். அங்கு அவர்கள் கரை ஒதுங்கிய நேர்கை, குதிரை மலை ஆகிய இரண்டு இடங்களை கண்டனர். வேத நாராயணன் செட்டி தன் கப்பலில் இருந்த செல்வம் முழுவதையும் அங்கே கொண்டு சேர்க்கும் படி பரவரை பணித்ததோடு கடல்கீலபம், கள்ளக்கிலபம் ஆகிய துறைகளில் முத்துக்குளிக்க ஏற்பாடுகள் செய்ததோடு இரும்பைப் பொன்னாக்கும் ரசாசவாதத்திற்கு உதவும் மரங்களையும் அங்கிருந்து கொண்டு வந்தான் என்கிறது அந்தக் குறிப்பு. பாண்டியர் அரசு வலிமையானதாக இருந்தவரை பரவர்கள் பாண்டிய மன்னர்களிடமிருந்து பொது வரிவிதி்ப்பிலிருந்து விலக்கையும் பாதுகாப்பையும் பெற்று வந்தனர். 16-ஆம் நூற்றாண்டு வரை பரவர் செல்வச் செழிப்போடும், யாருக்கும் கட்டுப்படாமலும் வாழ்ந்து வந்தற்கான சான்றுகள் உள்ளன். மலபார் கன்னட கடற்கரை சார்ந்த கப்பல் படைத் தலைவனான வான் ரீதெயும், மதுரையினைச் சார்ந்த துறைமுகங்களின் தலைமை வணிகனான வயுரென்ஸ் ஆகியோர் எழுதிய கடிதங்கள் ஆதாரங்களாக உள்ளன. 19-02-1669-ல் எழுதப்பட்ட கடிதம் இப்படிச் சொல்கிரது “ இங்கு அவர்கள் (பரவர்கள்) அவர்களின் சாதித் தலைவனுக்கே கட்டுப்பட்டவர்களாக உள்ளனர். அரசனுக்கு ஆண்டுதோறும் கப்பமாக ஒரு தொகையைக் கட்டிவாந்தார்களே தவிற நாட்டின் பிற மக்களுக்கு உள்ளது போன்ற கடுமையான வரிச்சுமை ஏதும் இல்லை, அரசனின் நேரடி ஆளுகைக்குட்பாடாதவர்களாக தங்களால் தேர்ந்தெடுக்கபப்ட்ட சாதித் தலைமைகளால் ஆளப்படுவோராக பரதவர்கள் உள்ளனர் “ கொல்லம் முதல் இராமேஸ்வரம் வரை வாழும் பரவர் இந்த சாதித் தலைவருக்கு வரிச் செலுத்துகின்றார்கள் “ என்கிறது அந்தக் கடிதக் குறிப்பு. (எட்கர் தர்ஸ்டனின் தென்னிந்திய குலங்களும் குடிகளும் - மேற்கண்ட கடிதம் பரதவரின் வாழ்வுக்கு ஒரு எடுத்துக்காட்டான ஒன்றாக விளங்குகிறது. வரலாற்றுக்கு முந்தைய காலம் தொட்டு அவர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்தமையும் அதுவே பல போர்களுக்கும் ஆக்ரமிப்புகளுக்கும் காரணமாக அமைந்ததையும் நாம் வரலாற்றை நோக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது’’
‘’சங்க நூல்களில் கூறப்படும் கடல்கோள் செய்திகளும், சங்கங்களின் அழிவும்,கடலால் அழிந்த பகுதிகளுக்கு மாற்றாகப் புதிய நிலப்பகுதியினைப் பாண்டியர்கள் கைப்பற்றியதும் போன்ற செய்திகள் பாண்டியர்களுக்கும் நெய்தல் நில மக்களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பைப் புலப்படுத்துகின்றன.
"மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வெள்வலின்
மெலிவு இன்றி, மேல் சென்று மேவார் நாடு இடம்பட
புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை
வலியனான் வணக்கிய, வாடாச் சீர்த்தென்னவன்..."
என்னும் கலித்தொகை வரிகள் (எண் 104 வரி 4--5) பாண்டிய நாட்டைக் கடல் கொண்ட செய்தியையும் அதற்கு ஈடாகப் புதிய நிலப்பகுதிகளைக் கைப்பற்றியதையும் குறிக்கிறது.
முதல் இரு சங்க நூல்களும் கடல் கோளால் அழிந்தபோது தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில நூற்கள் கூடக் காப்பாற்றப்படாமல் அழிந்தது எவ்வாறு என்பதும், தொடக்கக் காலப் பாண்டியர்களின் தலை நகரங்கள் நெய்தல் நிலத்தில் கடற்கரை அருகில் அமைக்கப்பட்டது ஏன் என்பது போன்ற வினாக்கள் நமக்கு ஒரு கேள்வி.
தமிழக வரலாற்றில், பாண்டியர்களின் கடல் சார்ந்த தொடர்பு, உறவு, தோற்றம், குலம் போன்றவை பற்றிய மீள் ஆய்வும் அவசியமாகின்றது. அத்தகைய ஒரு சிறு ஆய்வில் பாண்டியர்களுக்கும் நெய்தல் நில மக்களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை சங்க இலக்கியங்கள், அயல்நாட்டினரின் குறிப்புக்கள், குறிப்பாக இலங்கையில் அண்மையில் நிகழ்த்தப்பட்டக் கல்வெட்டுக்கள் ஆய்வு முடிவுகள், நாட்டார் இலக்கியங்கள்,வாய்மொழிக்கதைகள் போன்றவற்றின் வாயிலாக விளக்குவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம்.
நெய்தல் நில மக்களின் தொன்மை:-
பாண்டியர்களுக்கும் நெய்தல் நிலத்திற்கும் உள்ள தொடர்பு தெளிவானது, உறுதியானது. இதனால் தமிழ் இலக்கியங்களில் நெய்தல் நில மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும், "பரதவர்" என்ற சொல்லின் தொன்மையையும் தோற்றத்தையும் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது.
தமிழில் பரவை என்றால் பெரும் நீர்ப்பரப்பு அல்லது கடல் எனப் பொருள் படும். பரவை என்பதிலிருந்து பரவர் என்ற சொல் பிறந்தது. (பரவை+அர்) பரவர். பரதர் என்றால் நெய்தல் நில மக்கள், வைசியர் எனவும், பரதவர் என்ற சொல்லுக்குத் தென் திசை ஆண்ட குறுநில மன்னர்கள் எனவும் அகராதிகள் பொருள் கூறுகின்றன. (கழகத் தமிழ் அகராதி, 11--647).  பரவர், பரதர், பரதவர் என்ற முப்பெயர்களும் எழுத்து வேறுபாடுகளைக் கொண்டவை தாம். பரதவர் என்ற பெயரில் தகரம் கெட்டு, 'பரவர்' என்றும் வகரம் கெட்டு 'பரதர்' எனவும் மாறியுள்ளது.
"பரதவர் நுளையரோடு பறியர், திமிலர் சாலர்
கருதியக் கடலர் கோலக்கழியரே நெய்தல் நில மக்கள்",
(சூடாமணி நிகண்டு சூத்திரம்77)
இந்தச் சூத்திரத்தின்படி பரதவர்கள் நெய்தல் நில மக்களில் தலையானவர் என்பது தெரிகிறது.
நெய்தல் நில மக்களிடம் தலைவர்கள் இருந்தார்கள்,  அவர்கள் அரசருக்கு ஒப்பானவர்கள் என்பதற்கு இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன.
"கொண்கனே துறைவனோடு
குறித்த மெல்லம்புலம்பன்
தண்கடல் சேர்ப்பன் நெய்தல்
தலைவனைச் சாற்றும் நாமம்"
என்ற சூடாமணி சூத்திரமும்,
"கொண்கள் துறைவன் மெல்லம் புலம்பன்
தண்கடல் சேர்ப்பன்"
என்ற திவாகர சூத்திரமும்
"மெல்லப் புலம்பன் தண்கடல் சேர்ப்பன்
துறைவன் கொண்கண் நெய்தல் தலைமகன்
என்ற பிங்கலச் சூத்திரமும் இதைத் தெளிவுபடுத்தும். பரத குலத் தலைவன் அரசனுக்கு நிகரானவன் என்பதை,
அரசர் முறையோ பரதர் முறையோ
என்ற சிலப்பதிகார வரியால் அறியலாம். சிலப்பதிகாரம் (23--160)
சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் பரதர் என்ற சொல் பலவகையில் கையாளப்படுகிறது. "பரதர் மலிந்த பயங்கெழு மாநகர், பரதவ குமாரன்" என அவர்களது உயர்வு குறிக்கப்படுகிறது.,  பெரும்பாணாற்றுப் படை320 முதல் 335 வரையிலான வரிகள் இவர்களைப் பற்றி விரிவாகக் கூறுகின்றன.
சங்க இலக்கியங்களில் கூறப்படும் செய்திகளிலிருந்து பரதவர் முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், கடலில் பெருமீன் வேட்டையாடுதல் போன்ற தீரமிக்க செயல்களாலும், கடல் கடந்த வியாபாரங்களாலும் சிறந்தோங்கினார் என்பது தெளிவாகிறது.
வலை வீசும் புராணம் இவர்கள் காற்றையும் கடலையும் எதிர்த்துப் போராடும் இவர்களது வாழ்க்கை முறையினைத் தெளிவாகக் கூறுகிறது. பெருமீன்கள், பனைய மீன்கள் போன்றவற்றை நீரில் எதிர்த்துப் போராடி வெல்லும் திறமை மிகுந்த வேட்டைச் சமூகமாக இது விளங்கியது. போராட்டங்களில் தனக்கு உதவிய மீனையும், பிற மீன்களின் இருப்பிடத்தை அறிய உதவி புரியும் மீன்களையும் தங்களுடைய நட்பு விலங்காக அவர்கள் கொண்டிருந்தனர்.
படகு முறிந்து கடலில் தத்தளித்த மீனவனைக் காப்பாற்றிக் கரை சேர்த்த மீனைப் பற்றிய வாய்மொழிக் கதைகள் எல்லாப் பகுதிகளிலும் வழக்கில் உள்ளன.
இதுவே பிற்காலத்தில் அவர்களது அரசியல் வியாபாரச் சின்னமாக மாறியது என்பதை இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் தெளிவாக விளக்குகின்றன. (புஷ்பரத்தினம், 1999:70)
பரதவர்களை 'கடலர்' என்று திவாகரம், பிங்கலம், சூடாமணி நிகண்டுகள் கூறுகின்றன. நிலத்தில் போராடும் வீரர்கள் மறவர்கள் என அழைக்கப்பட்டது போலக் கடலில் (பரவை)போரிட்ட வீரர்கள் பரவர் என அழைக்கப்படனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பாண்டியர்களின் குலச்சின்னமான மீன் அவர்கள் நெய்தல் நிலத் தலைவர்கள் என்பதை மறைமுகமாகக் கூறும். மேலும் பாண்டியர்களின் பல்வேறு பெயர்களான கடலன், வையைத் துறைவன், மீனவன் போன்ற வார்த்தைகள் கடல் சார்ந்தவற்றையே கூறுகிறது. பாண்டியர் பற்றிய பல பாடல்கள் "மீனவ" என்றே தொடங்குகிறது.
யாப்பெருங்கலம் இயற்றிய அமுதனார் தாம் இயற்றிய நூலில் மீனவன் கேட்ப என்றே கூறியுள்ளார்.
சுந்தரபாண்டியன் என்னும் மன்னன் கோபாலன் கணபதி ஆகிய காகதீயர்களை வென்ற செய்தி சிதம்பரம் நடராசர் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. அதில்
கொங்கர் உடல் கிழிய குத்தியிரு
வெங்கண் அழலில் வெதும்புமே
சூழ்த்தாம் அம்புனையுஞ் சுந்தரதோள்
மீனவனுக்கு ஈழத்தான் இட்ட இறை
(இந்தப் பாடல் முழுமையாக இல்லை)
என்று மன்னன் திறை செலுத்தியது கூறப்பட்டுள்ளது.
பாண்டியர்களின் கடல் சார்ந்த தொடர்புகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள் கூற முடியும்.
வடிவலம்ப நின்ற பாண்டியன், திருவிற்பாண்டியன் (தொல்காப்பியப் பாயிரம்) எனவும் சிறப்பிக்கப்படுகிறான்.புதிய நிலப்பகுதிகளைத் தன்னுடன் இணைத்த என்ற பொருளைக் குறிக்கும். கடற்கோளால் தென்பகுதியை இழந்து அதற்கீடாக வட பகுதியை வென்று தனது அரசைப் பெருக்கினான் என்பதாகும். இவன் சாவா, சுமத்ரா,போர்னியோ போன்ற நாடுகளை வென்றுள்ளான். இவையனைத்திலும் பாண்டியர் ஆட்சி நடைபெற்றது என்பதற்குச் சான்றாக போர்னியோத் தீவில் ஆறு ஒன்றுக்கு, "கடுங்கோன்" எனப் பெயரிட்டிருப்பதையும் ம.இராசசேகர் தன்னுடைய 'பாண்டியர் வரலாறு' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கடல் கடந்த இந்த ஆதி படைகள் வன்மை வாய்ந்த நெய்தல் நிலத்தில் நடத்தப் பெற்றிருக்க வேண்டும் என்பதையும் நாம் உணரலாம். இவனுடைய காலத்தில் கடல் பொங்கி வந்ததாகக் கூறப்படுவது முதற் கடற்கோளாக இருக்கக் கூடும். இவன் 'கடல் சுவற வேலெறிந்தான்' என்பது கடல் கடந்து பல நாடுகளை வென்றான் என்பதாகவும், கடல் வடிவம்பலம்ப நின்றது என்பது இவன் கடலில் கப்பலைச் செலுத்திய திறனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். கடற்கோளால் உலகம் அழியப் பாண்டிய வேந்தன் ஒருவன் மட்டும் தப்பி உயிர் வாழ்ந்திருந்த செய்தி வேள்விக்குடிச் செப்பேட்டில் குறிக்கப்படுகிறது.
இதே போன்று "கடலுள் மாய்ந்த இளம் வழுதி" என்ற தொடர் கடல் போரில் உயிரிழந்த அல்லது கடலில் மீன் வேட்டைக்குச் சென்ற பாண்டிய இளவலைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.
மன்னர்கள் காடுகளில் வேட்டைக்குச் செல்வதைப் போலப் பாண்டிய மன்னர்கள் கடலில் வேட்டைக்குச் சென்றனரோ என்று எண்ண இடமளிக்கின்றது. இதே போன்ற ஒரு நிகழ்ச்சி 'வலை வீசும் புராணத்திலும்'கூறப்படுவது சிந்திக்கத் தக்கது.
குறுநில மன்னர்கள் ஆட்சியும் இனக்குழுக்களின் அரசும்:
பெரும் மன்னர்களும், அரசுகளும் திடீரென்று தோன்றி இருக்க முடியாது. இவர்களின் தோற்றத்திற்குத் தெய்வீகக் கதைகள் புனையப் பட்டிருந்தாலும் ஆதியில் இவர்கள் வலிமை வாய்ந்த இனக்குழுவின் தலைவர்களாகவோ அல்லது வலிமையும் பொருளாதார பலமும் பெற்றவர்களாகவோ இருந்திருக்க வேண்டும். இவர்களே மெல்ல மெல்ல தம்முடைய ஆற்றல், அறிவு பல நாட்டு மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு போன்றவற்றால் பல்துறைப்பட்ட அனுபவ அறிவைப் பெருக்கிக் கொண்டு அதனடிப்படையில் அரசுகளையும் ஆட்சி முறையையும் தோற்றுவித்திருக்க இயலும்.
எளிமையான அமைப்புக்களிலிருந்து சிக்கலான அமைப்புகள் தோன்றுவது அறிவியல் பூர்வமானது. இந்த வளர்ச்சிப்படி அமைப்பினை இலங்கைக் கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன. (புஷ்பரத்தினம், 1999: 153)
இந்தப் பண்புகள் அனைத்தும் அமையப் பெற்ற இவர்களைப் பற்றி மதுரையை அடுத்த அரிட்டாப்பட்டி கிராமத்தில் உள்ள சமணக் குடைவரைக் கோயிலில் காணப்படும் கல்வெட்டுச் செய்தி இவ்வாறு கூறுகிறது.
"இலஞ்சி வேள் மாப்பரவன் மகன்
எமயவன் நல்முடிவுகை கொடுப்பித்தவன்"
(தம்பி ஐயா பர்னாந்து, The Hindu, 15--9--20
இதற்கு இலஞ்சியின் அரசன் மாப்பரச எமயவான் இந்தக் குகை அமைப்பதற்கு ஏற்பாடு செய்தான் என்பது பொருள். இதில் மாப்பரசன் என்றால் அறிவுடைய பரவன், பெரிய பரவன், பெருமையுடைய பரவன் என்று பொருள்படும். இதனை பரதவ குமார என்ற சிலப்பதிகார சொல்லாட்சியோடு ஒப்பு நோக்கத்தக்கது.
"தென் பரதவர் போர் ஏறே", "பரதவர் தலைவன்" எனப் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிய சங்க இலக்கியங்களின் சொல்லாட்சி ஒப்பு நோக்கத்தக்கது. அதாவது வரலாற்றின் தொடக்கத்தில் வலிமை, அறி செல்வம் நிரம்பப் பெற்ற நெய்தல் நில மக்களுள் ஒருவன் தலைவனாக எற்றுக் கொள்ளப்பட்டு ஆட்சி அமைக்கத் தலைப்பட்டிருக்கலாம் என்பதும், தங்கள் அடையாளமாக மீன், படகு, கப்பல் போன்றவற்றைப் பயன்படுத்தியதும் இலங்கையில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுச் செய்திகளால் உறுதி செய்யப்படுகின்றது.
இலங்கையில் இது வரை கிடைத்த கல்வெட்டுக்களில் வரும் குலம், சமூகம், தொழில் பிரிவுகள் பற்றிய செய்திகளையும், இதற்குச் சம காலத் தமிழ்நாட்டு இலக்கியங்களில் வரும் செய்திகளின் ஒற்றுமையையும் சுட்டிக்காட்டுபவையாக இவை அமைந்துள்ளன. சங்க இலக்கியத்தில் வரும் பரதவ சமூகத்திற்கும் இலங்கை பிராமிக் கல்வெட்டுகக்ளில் வரும், 'பரத' என்ற பெயருக்கும் இடையிலான பெயர் சமூக அந்தஸ்து, தொழில் வாழ்விடங்களில் காணப்படும் ஒற்றுமை இவ்வாய்வுக்கு மேலும் வலிமை சேர்ப்பதாகும்.



இலங்கையில் கிடைத்த கி.மு. 1--ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுக்கள் பெளத்த சங்கத்திற்கு சமூகத்தின் உயர்நிலைகளில் இருந்த பலதரப்பட்ட பிரிவினர் அளித்த குளம், கால்வாய், குகை, கற்படுக்கை,நாணயங்கள், உணவு, தானியம் என்பன பற்றிக் கூறுகின்றன.
இவற்றைப் பிற மதத்தவரும் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு வர்த்தகம், பொருளாதார நடவடிக்கைகளுக்காகச் சென்றவர்களும் அவதானித்துள்ளனர். இவ்வாறு தானமளித்தோரில் பலர் தமது பெயருடன் தமது மூதாதையினர் பட்டம், பதவி, தொழில், வாழுமிடம் போன்றவற்றையும் பதிவு செய்துள்ளனர். இவை சுருக்கமான தகவல்களாக இருப்பினும் அக்காலத்தில் எவ்வாறு சமூக, தலைமை அமைப்பானது உருவாக்கப்பட்டது என்பதை விளக்கிக் கொள்ள உதவுகின்றன.
இதுவரைக்கும் இலங்கை நாட்டின் பல பகுதிகளிலிருந்து கிடைத்த கல்வெட்டுக்களில் 155-க்கும் மேற்பட்டவற்றில் 'பத' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 'பரத' என்ற சொல்லின் இன்னொரு வடிவமாகக் கருதப்படுகிறது. இதன் பெண்பாற் சொல்லாக 'பதி' என்ற பெயர் காணப்படுகிறது. இவ்விரு பெயர்களும் கல்வெட்டுக்களில் ராஜா, பருமக போன்று ஒரு பட்டப் பெயருக்குரிய நிலையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (புஷ்பரத்தினம்--தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு)
தோலமி சோழ நாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடைப்பட்ட கடல் சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களை 'பதை எனக் கூறுகிறார். இது பரதவரைக் குறிக்கலாம். (டி.கே.வேலுப்பிள்ளை, 1980, புஷ்பரத்தினம், பக்கம்:62)
திராவிட சொல்லகராதியில் 'பரத' என்ற சொல்லுக்குச் சமமாகப் பரதவர், பரதர், பரவர் என்ற சொல் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலோனி என்ற அறிஞர் தென் தமிழ் நாட்டிலும் வடமேற்கு இலங்கையிலும் தற்காலத்தில் வாழ்ந்து வரும் பரதவ சமூகத்தின் தோற்றத்தைச் சங்க இலக்கியங்களில் வரும் பரவர், பரதவர் சமூகத்துடன் தொடர்பு படுத்தி இரு பெயர்களும் ஒன்றென்கிறார். (புஷ்பரத்தினம், 1999:61).  இலங்கைத் தமிழகப் பண்பாட்டுத் தொடர்பின் பின்னணியில் நோக்கும்போது இது பொருத்தமுடையதாகத் தெரிகிறது.
மேலும் பாண்டி நாட்டுச் செல்வமாக இருந்த நெய்தல் நிலத்து முத்து பற்றிச் சங்க இலக்கியங்களிலும் வடமொழி இலக்கியங்களிலும் பல குறிப்புகள் உள்ளன. பாண்டியர்களின் செல்வச் செழிப்பிற்குக் காரணமாகக் கடல்படு திரவியங்களே கூறப்படுவதும் இங்கு சிந்திக்கத் தக்கது. முத்து, பாண்டியரின் சொத்தாகவும், மீன் பாண்டியரின் பிரதான உணவாகவும் விளங்கியது. சங்க இலக்கியத்தில் மீன் என்ற சொல் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தகத்தில் குதிரை வெளிநாட்டு வர்த்தகப் பொருளாகவும், உப்பு உள்நாட்டு வர்த்தகப் பொருளாகவும் திகழ்ந்தன. பட்டினப்பாலையும் மதுரைக் காஞ்சியும் மேலைநாட்டுக் குதிரைகள் தென்பாண்டித் துறைமுகங்களுக்குக் கொண்டுவரப் பட்டதைக் கூறுகின்றன. பாண்டி நாடு நெடுகிலும் கடற்கரையை ஒட்டிய நெய்தல் நிலத்தில் குதிரை வர்த்தகம் நடந்ததாகத் தெரிகிறது. பாலி நூல்கள் தமிழ்நாட்டு பரதவ வணிகர்கள் குதிரை வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறுகின்றன.
இவ்வாறு பலதரப்பட்டப் பொருளாதார நடவடிக்கையில் நெய்தல் நில மக்கள் ஈடுபட்டதனால் செல்வம் குவிந்தது. இவர்களின் மாளிகைகள் கப்பல்கள், அலங்கார வண்டிகள், வாகனங்கள் பற்றி வரும் குறிப்புகள் இவர்களின் செல்வ நிலையைக் காட்டுகின்றன. பாண்டிய நெடுஞ்செழியனைக் 'கொற்றவன் காவலன்,' "பரதவத் தலைவன்",எனக் கூறுவது அரசியலிலும், சமூகத்திலும் பாண்டிய மன்னர்களுக்கும் நெய்தல் நில மக்களுக்கும் இடையேயான மிக நெருங்கிய தொடர்பைக் காட்டுகிறது.
பாண்டிய நாட்டிலுள்ள தாமிரபரணியாற்றங்கரை பரதவர் வாழும் இடமாக அடையாளம் காணப்படுகிறது. இதே பெயர் முழு இலங்கையையும் குறிக்கும் பெயராக மாறியது. இச்சமூகத்தினரின் வர்த்தக அரசியல் பண்பாட்டுத் தொடர்பைக் காட்டுகிறது.
"பரதர்" பற்றி வரும் கல்வெட்டுக்களில், பொல நறுவை மாவட்டத்தில் உள்ள தூவகெல என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில், 'பரதஸஹகிதஸ" என்பவன் கொடுத்த குகை பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது.
இதில் 'பரத' என்ற பெயருக்கு முன்னால் கப்பலின் உருவம் வரையப்பட்டுள்ளது. இது 'பரத' என்பவனைக் கப்பல் தலைவனாகவோ அல்லது வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டவனாகவோ கருத இடமளிக்கிறது.
குரு நாகல் மாவட்டத்தில் உள்ள கல்வெட்டில் தலைவன் என்ற பட்டயத்துக்கு உரிய 'பரத' என்பவன் அரச தூதுவனாகக் கடமையாற்றியமை கூறப்பட்டுள்ளது.
கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உதிரன், தசபிடன், மகாசாத்தன், கபதி கடலன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்களோடு 'பரத திஸ" என்ற பெயர் பொறித்த நாணயமும் கிடைத்துள்ளன. இதன் சிறப்பு என்னவெனில் பின்புறத்தில் "பரத திஸ" என்றும் முன்புறத்தில் இரு மீன் கோட்டுருவமும் இடம் பெற்றிருப்பதாகும். இதைப் பாண்டியர்களின் தொடக்கமாகக் கருத இடமுண்டு. இதில் பரத என்ற பெயர் "பரதவ" சமூகத்தையும் 'திஸ' என்ற சொல்லானது 'திரையர்' என்ற பொருளையும் தரும். திரை என்ற சொல்லுக்குக் கடல், கடலலை, குளம் என்ற பல பொருள்கள் உள்ளன.
கி.மு. 2 ஆம் நூற்றாண்டிற்குரிய நாணயம் ஒன்று மீன் அமைப்பில் வடிவமைக்கப்பட்டது. அதன் மத்தியில்'திஸஹ' என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இதை 'திஸ' அல்லது 'திரையன்' என்பானின் வணிக முத்திரை எனலாம். முதலில் பெரும் பரதவ வணிகர்கள் தஙக்ள் வியாபார அடையாளமாகப் பயன்படுத்திய சின்னம் பின்பு படிப்படியாகப் பாண்டியர்களின் கொடியாகவும், அரசச் சின்னமாகவும் உருமாறியிருக்கக் கூடும்.
கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் இலங்கையில், ஆட்சி புரிந்த முதல் தமிழ் மன்னர்களான 'சேன, குத்தக' என்போரின் பெற்றோர் வெளி நாட்டிலிருந்து குதிரைகளைக் கொண்டு வந்து இலங்கையில் விற்பனை செய்த குதிரை வணிகனின் பிள்ளைகள் என மகாவம்சம் கூறுகிறது. குதிரை வியாபாரத்தில் தென்பாண்டி நாட்டு பரதவ வணிகர்கள் ஈடுபட்டனர் எனப் பாலி நூல்கள் கூறுவதன் அடிப்படையில் இலங்கையிலும் தமிழகத்திலும் ஏற்பட்ட குறுநில மன்னர்களின் ஆட்சியையும் தொடர்பு படுத்திப் பார்க்கலாம். மெல்ல மெல்ல வலிமை வாய்ந்த நெய்தல் நிலத் தலைவர்கள் குறுநில மன்னர்களாகவும், முடியுடைய வேந்தர்களாகவும் உருமாற்றம் அடைந்துள்ளதைப் பார்க்கும்போது நெய்தல் நில மக்களுக்கும், பாண்டியர்களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு தெளிவாக விளங்குகிறது. அதாவது இருவரும் ஒருவரே அல்லது ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களே என்ற முடிவுக்கு நம்மை இட்டுச் செல்கின்றது.
குமரி முனையில் அரசனாகவிருந்த வில்லவராயன் என்பான் பகவதி அம்மன் ஆலயத்திற்குத் திருப்பணி செய்ததாக ஆலயத்தின் ஒரு கல்வெட்டுச் சான்று பகருகிறது. இதைத் திருவிதாங்கூர் மக்கள் தொகை ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது. பாண்டிய மன்னர்கள் 'குமரிச் சேர்ப்பன்' என்று குறிக்கப்படுவது இங்கு நமக்கு புதிய வரலாற்றுச் சிந்தனையைத் தோற்றுவிக்கிறது.
மேலும் இலங்கையை ஆண்ட பராக்கிரம பாகுவுக்கும் 91153--1186) குலசேகர பாண்டியனுக்கும் நடந்த போரில் வில்லவராயன் கொல்லப்பட்டான் என்று அத்தியாயம் 76 பாடல் வரி 163 சூள வம்சம் என்ற பாலி மொழி நூலில் கூறப்பட்டுள்ளது. இருவரும் ஒருவரா அல்லது ஒரே குலத்தில் உதித்தவர்களா என்பது ஆய்வுக்குரியது.
இதே போன்று ஐவர் ராஜாக்கள் கதையில் குலசேகர பாண்டியனுக்காகக் கன்னடியனுடன் வில்லவராயனும்,வில்லவராயக் கூட்டங்களும் போரிட்டு மாண்டதையும், மற்றொரு மந்திரி காலிங்கராயன் பெண்களையும்,குழந்தைகளையும் பாதுகாப்பாகக் கடற்துறைக்கு அழைத்துச் சென்று பாதுகாத்ததையும் மிக விரிவாகச் சொல்கிறது.
செண்பகராமன் பள்ளுவின் தலைவன், காலிங்கராயன் என அழைக்கப்படுவதும் நமக்கு நெய்தல் நில பரதவர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இருந்த உறவினைக் காட்டுகிறது. இவையனைத்தும் பரதவ குலத்தினரிடம் வழங்கப்பட்ட பட்டங்களாகும். இவர்களில் சிறந்தோரே குறுநில மன்னர்களாகவும்,தளபதிகளாகவும் விளங்கினர் என்பது மேற்கூறியவற்றால் புலனாகும்.
"ஒன்று மொழி" பரதவர் என்ற மதுரைக் காஞ்சியின் வரிகளுக்கேற்ப இவர்களுக்குள் நிலவிய அசாதாரணமான ஒற்றுமை ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பாண்டியர்களின் வலிமையான ஆட்சிக்கு அடிகோலியது. இவர்களே முதன்மையான பாண்டியர்களின் தளபதிகளாகவும், மந்திரிகளாகவும் கடற்துறைகளிலும் போர் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் இருந்து ஆட்சி செய்தனர். இடைக்காலங்களில் முதன்மைப் பாண்டிய மன்னனுக்காக போரில் உயிர் துறந்ததையும் வரலாற்றின் மூலமாகவும், நாட்டார் இலக்கியங்கள் வாயிலாகவும் அறிகிறோம். சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னன் இறந்த பிறகு கோநகர் கொற்கையிலிருந்த வெற்றி வேல் செழியன் மன்னரானது, காலம் காலமாக நடந்து வந்த பரம்பரைப் பழக்கம் என்பதற்கு வலிமையான சான்றாகும்.
மேற்கூறிய செய்திகளிலிருந்து பாண்டியர்களுக்கும் நெய்தல் நில மக்களுக்குமான தொடர்பு அவர்கள் இருவரும் வெவ்வேறானவர்களாக இருக்க முடியாது என்பதையும் அவர்களுக்கு இடையிலான மிக நெருங்கிய தொடர்பு இருந்தது என்பதையும் இருவரும் ஒருவரே என்பதையும் பாண்டியர்கள் நெய்தல் நிலத் தலை மக்கள் தாம் என்ற புதிய முடிவுக்கு நம்மை இட்டுச் செல்வதையும் உணரலாம்.’’
- ச.சகாயராஜ்,  ஆசிரியர், கார்மல் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில்



 .

 ‘’கடலும், கடல் சார்ந்த பகுதியில் வாழும் நெய்தல் நில மக்களாக பரதவர் குறிக்கப்படுகின்றனர்.. பரதவர்களுக்கு நீண்ட வரலாற்றுப் பின்னணி உண்டு. கப்பல் ஓட்டுவதிலும் கடல்வள வாணிபத்திலும் - சிறப்புற்று விளங்கிய இவ்வினம் பற்றி – பல வரலாற்று ஆசிரியர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அத்தகைய ஆய்வுகளை ஒன்று திரட்டி யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை விரிவுரையாளர் கலாநிதி ப.புஸ்பரட்டினம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்

 சங்ககாலத்தில் கடலும் கடல் சார்ந்த பகுதியிலும் வாழ்ந்த நெய்தல் நில மக்களாகப் பரதவர் குறிக்கப்படுகின்றனர். இவர்கள் சில இடங்களில் பரவர் எனவும், பல இடங்களில் பரதவர் எனவும் குறிக்கப்படுகின்றனர். இவற்றில் இருந்து தென்தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில் அமைந்த காவிரி நதிப்படுக்கைக்கும் தாமிரபரணி ஆற்றிட்கும் இடைப்பட்ட பகுதியில் இச்சமூகம் வாழ்ந்ததை அடையாளம் காண முடிகிறது. (ளுநநெஎசையவநெ 1985: 49 – 50) இவை தற்கால திருநெல்வேலி இராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி எனக் கூறலாம். தொலமி, சோழ நாட்டிற்கும், பாண்டி நாட்டிற்கும் இடைப்பட்ட கடல் சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களை பதை எனக் கூறுகிறார். இது பரதவரைக் குறிக்கலாம் (ஏநடரிpடைடயi 1980: 13) பரதவரின் முக்கிய தொழிலாக சங்க இலக்கியத்தில் சங்கு, முத்துக்குளித்தல், மீன்பிடித்தல், வர்த்தகம் என்பனவும் குறிக்கப்படுகின்றன. பாண்டி நாட்டு செல்வமாக இருந்த முத்து பற்றி சங்க இலக்கியத்திலும், வடமொழி இலக்கியத்திலும் பல குறிப்புக்கள் உள்ளன.

 புறநானூறு முத்துக்குளித்தலில் ஈடுபட்ட பரதவரை பாண்டிய மன்னன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதிலும் சோழ மன்னருக்கு அவர்கள் சவாலாக விளங்கியதாகக் கூறுகிறது (புறம் 378’1) பெரிபுளஸ் என்ற நூலில் முத்துக்குளித்தலில் ஈடுபட்ட மக்களை பாண்டிய மன்னன் தனது சிறையில் அடைத்ததாகவும், சிறைத்தண்டணை பெற்ற மக்களைப் பாண்டிய மன்னன் முத்துக்குளித்தலில் ஈடுபடுத்தியதாகவும் கூறுகிறது. (ளுஉhழகக 1912: 46) முத்துக்குளித்தலில் பாண்டிய மன்னருக்கும் பரதவருக்கும் பிற்காலத்திலும் பகைமை இருந்ததை நெடுஞ்செழியன் பராந்தகன் வேள்விக்குடிச்செப்பட்டில் வரும் பரவரைப் பாழ்படுத்தும் என்ற சொல் உறுதிப்படுத்துகிறது. (முருகானந்தம் 1990, 3) முத்துக்குளித்தலைப் போல் சங்கு குளித்தலும் முக்கிய தொழிலாக விளங்கியது. பரதவர் சங்குகளுக்காக கடலுக்குள் மூழ்கியதையும் அவற்றை கள்ளுக்காக விற்றது பற்றியும் அக நானூறு கூறுகிறது. (அகம் 296- 8, 9, 350: 11-13) – பாண்டி நாடு நெடுகிலும் சங்கும் முத்தும் விற்பனை செய்யப்பட்டதை மதுரைக்காஞ்சி கூறுகின்றது. பாண்டிய மன்னர் வெள்வளை தரித்ததாக சின்ன மன்னூர் செப்பேடு கூறுகிறது. (ளுஐஐ.3:4)

 பரதவரின் இன்னொரு தொழிலாக மீன் பிடித்தலும் வர்த்தகமும் விளங்கியது. முத்து பாண்டியரின் சொத்தாக விளங்கியது போல் மீன் பாண்டியரின் பிரதான உணவாக இருந்தது. சங்க இலக்கியத்தில் மீன் என்ற சொல் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறுந்தொகையில் வரும் மீன் வேட்டம். திமில் வேட்டுவர் என்ற சொல்லாட்சி மீன்பிடித் தொழிலின் சிறப்பைக் காட்டுகிறது. (குறு 123)- பரதவர் காய விட்ட மீனை (உப்புக்கண்டம்) விற்பனைக்காக படகுகளில் கொண்டுவந்ததாக மதுரைக்காஞ்சி கூறுகிறது. வர்த்தகத்தில் குதிரை வெளிநாட்டு வர்த்தகப்பொருளாகவும் திகழ்ந்தன. பட்டினப்பாலையும் (பட்டினப் 185 – 193) மதுரைக்காஞ்சியும் (மதுரை 321. 323) மேலை நாட்டுக் குதிரைகளும் வட இந்தியக் குதிரைகளும் தென்னிந்தியத் துறைமுகங்களுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறுகின்றன.

 மதுரைக் காஞ்சி பாண்டி நாடு நெடுகிலும் குதிரை வர்த்தகம் நடந்ததாகக் கூறுகிறது. (மதுரை 315.24) இலங்கைப் பாளி நூல்கள் தமிழ் நாட்டு வணிகர் இலங்கையில் குதிரை வர்த்தகம் செய்ததாகக் கூறுகின்றன. இவ் வர்த்தகத்தில் பரதவர் ஈடுபட்டதாக செனவிரட்ண கூறுகிறார். பரதவர் கடலிலிருந்து எடுத்த உப்பை உமணர் உள்நாட்டில் விற்பனை செய்தார். நற்றிணையில் உமணர் வருகையை எதிர்பார்த்து உழாத உழவர் (பரதவர்) உப்பைக் குப்பைகளாக வைத்துக் காத்திருந்தனர் என்ற குறிப்புள்ளது. (நற் 138.12) பாண்டி நாட்டிலுள்ள சில பிராமிக் கல்வெட்டுக்கள் உப்பு வணிகர் பற்றிக் கூறுகின்றன. (ஆயாயனநஎயn 1966)

 இவ்வாறு பலதரப்பட்ட பொருளாதார நடவடிக்கையில் பரதவர் ஈடுபட்டதினால் செல்வம் இவர்களிடத்தே குவிந்தன. சங்க இலக்கியத்தில் இவர்களது இருப்பிடங்கள், மாளிகைகள், கப்பல்கள், அலங்கார வண்டிகள், வாகனங்கள் பற்றி வரும் குறிப்புக்கள் இவர்களின் செல்வ நிலையை காட்டுகின்றன. (மதுரை 315. 323 பெரும்பாண் 319, 324 அகம் 86) புற நானூறில் வரும் ‘தென் பரதவர் மிடல் சாய’ என்ற சொற்றொடர்களும், பாண்டிய நெடுஞ்செழியனை கொற்றவன் காவலன் ‘பரதவ தலைவன்’ எனவும் கூறப்படுவது சங்ககால அரசியலிலும், சமூகத்திலும் பரதவருக்கிருந்த மதிப்பைக் காட்டுகின்றது.

 இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் பரத என்ற பெயருக்குரியவர்கள் ஆற்றிய தொழில்கள், பதவிகள், சமூக அந்தஸ்து என்பவற்றை நோக்கும் போது சங்க இலக்கியத்தில் வரும் பரதவ சமூகத்தை அப்படியே நினைவுபடுத்துவதாக உள்ளன. சங்க இலக்கியங்களில் பரதவ சமூகம் வர்த்தகத்தில் ஈடுபட்டது பற்றிக் கூறப்படுவது போல், இலங்கை வரலாற்று இலக்கியங்களில் எந்தவித குறிப்பும் காணப்படவில்லை. ஆனால் இக்காலத்தில் தமிழர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டது பற்றி ஆக்காங்கே சில குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. செனிவரட்னா இலங்கையில் பரதவர் பற்றிவரும் பெரும்பாலான கல்வெட்டுக்கள் பெருங்கற்கால கறுப்பு – சிவப்பு மண்டபங்கள் காணப்படும் இடங்களை அண்டிய பகுதியில் காணப்படுவதை சான்றாதாரம் காட்டி வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து பரதவர் இலங்கை வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறுகிறார். (1985 : 49) அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழ்வாய்வில் குடியேற்றத்தின் ஆரம்பகாலச் சான்றுகளுடன் இலங்கையில் கிடைக்கப்பெறாத பளிங்குக் கற்கள், மணிகள், குதிரை எலும்பின் எச்சங்கள் கிடைத்துள்ளன. (ஊழniபொயஅ 1996 : 81) இவை வணிக குடியேற்றம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

 தமிழ் நாட்டில் பரதவர் வாழ்ந்த இடங்களில் ஒன்றாகப் பாண்டி நாட்டிலுள்ள தாமரபரணி ஆற்றங்கரை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதே இடப்பெயர் வடமேற்கு இலங்கையில் உள்ள ஒரு இடத்தின் பெயராக கி.மு.6ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டு, பின்னர் முழு இலங்கைக்குரிய பெயராக மாறியதை அசோகன் காலக் கல்வெட்டிலும், கி.பி.1.2.ஆம் நூற்றாண்டுக்கு உரிய வெளிநாட்டார் குறிப்புக்களிலும் காணமுடிகிறது. இவ்விடப் பெயர் ஏற்பட பாண்டி நாட்டிலுள்ள தாமரபரணி ஆற்றங்கரையிலிருந்து ஏற்பட்ட வர்த்தக குடியேற்றம் ஒரு காரணமாக இருக்கலாமென கூறுவோருமுளர். ஆனால் இலங்கையில் கி.மு.6ஆம் நூற்றாண்டிலிருந்து அறியப்படும் இப்பெயர் தமிழ் நாட்டு வலலாற்று மூலங்களில் கி.பி.12ஆம் நூற்றாண்டின் பின்னரே காணப்படுகின்றன. இவற்றை நோக்கும் போது இரு பிராந்தியத்திலும் வாழ்ந்த பரதவ சமூகத்தினருக்கு இடையிலான வர்த்தகப் பண்பாட்டுத் தொடர்பால் இங்கிருந்தே அப்பெயர் தமிழ் நாட்டிற்கு சென்றதா என எண்ணத் தூண்டுகிறது.

 பரத பற்றி வரும் கல்வெட்டுக்களில் பொலநறுவை மாவட்டத்தில் உள்ள தூவகெல என்ற இடத்தில் காணப்படும் கல்வெட்டு சிறப்பாக குறிப்பிடத்தக்கது. (வழக்கத்திற்கு மாறாக இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக எழுதப்பட்டுள்ள இககல்வெட்டில் பரதஸ ஹகிதஸ (டீயசயவயளயலய மவையளய) என்பவன் கொடுத்த குகை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதில் பரத என்ற பெயருக்கு முன்னால் கப்பலின் உருவம் வரையப்பட்டுள்ளது. (ஏறத்தாழ இதையொத்த கப்பல் உருவம் தமிழ் நாட்டில் அழகன் குளம் அகழ்வாய்வின் போது கி.மு.2.1 ஆம் நூற்றாண்டுக்குரிய ரௌலட்டட் மண்டபத்தில் பெறப்பட்டுள்ளது.) இது பரத என்பவனை கப்பல் தலைவனாக அல்லது, வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்ட வணிகனாக கருத இடமுண்டு. தொலமி பாண்டி நாட்டுக் கடற்கரைப் பகுதியில் தரித்து நின்ற கப்பல் பற்றி தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். சங்க இலக்கியத்தில் அம்பி, நாவாய், வங்கம், படகு, தொணி, பங்றி, திமில் என்பன கடற்போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட கலன்களாக குறிப்பிடப்பட்டு உள்ளன. இதில் திமில், அம்பி என்பன மீன் பிடித்தலுக்கும் பெரிய கப்பலிலிருந்து பொருட்களை துறைமுகங்களுக்கு கொண்டு வரவும் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. வங்கம், நாவாய் நீண்ட கடற்பயணத்திற்கும் வர்த்தகத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. (சுப்பராயலு 1983 : 161 – 162) இலங்கையில் தமிழ் வணிகனாகிய நாவாய் தலைவன் தென்னிந்தியாவில் இருந்து குதிரையை கொண்டு வந்து விற்பனை செய்ததாக பாளி நூல்கள் கூறுகின்றன. நாயன்மார் பாடல்கள் வங்கம் நிறைந்த துறை முகமாக வட இலங்கையில் உள்ள மாதோட்டத்தைக் கூறுகின்றன. (மயினைகிளார் 1953) இதனால் பொலநறுவைக் கல்வெட்டில் வரும் கப்பல் உருவத்தை பாளி, தமிழ் இலக்கியங்கள் கூறும் நாவாய் அல்லது வங்கமாகக் கருதலாம்.

 கல்வெட்டுக்கள் சிலவற்றை நாவிக என்ற பெயருடன் படகெ, தொட என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புரணவிதாண இவை கடற்போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட கலன்கள் எனக் கூறுகிறார். இதில் படகெ, தொட என்ற சொற்கள் தமிழில் வழக்கில் உள்ள படகு, தோணி போன்ற சொற்களுடன் தொடர்புபடுத்த இடமுண்டு. அண்மையில் பிரித்தானிய nஐர்மன் ஆய்வுக் குழுவினர் அநுராதபுர பகுதியில் மேற்கொண்ட அகழ்வாய்வின் போது கி.மு.3ஆம் நூற்றாண்டுக்குரிய சங்ககால நாணயங்களையும் கடற்போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட கலம் ஒன்றின் உருவம் பொறித்த நரைநிற மட்பாண்ட ஓடு ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர். (ஊழniபொயஅ 1996இ92) இதில் உள்ள கடற்கலத்தை கல்வெட்டுக்களில் வரும் படகெ. தோட போன்ற சொற்களுடன் தொடப்பு படுத்தலாம். இதையொத்த உருவத்தை தமிழ் நாட்டில் புதிய கற்கால ஓவியங்களிலும் சாதவானகர் கால நாணயங்களிலும் காணமுடிகிறது. இவ் ஆதாரங்களில் இருந்து சங்க காலத்திற்கு முன்பு இருந்தே இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையே கடல் வாணிபத் தொடர்புகள் இருந்ததென உறுதிப்படுத்தலாம். இவை பொலநறுவைக் கல்வெட்டில் வரும் பரத என்பவனை அயல் நாடுகளுடன் கடல் வாணிபத்தில் ஈடுபட்டவனாகக் கருத இடமளிக்கிறது.

 சங்க இலக்கியத்தில் பரதவரின் முக்கிய தொழில்களில் ஒன்றாக முத்து, சங்கு குளித்தல் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் தொழில்கள் பாண்டி நாட்டிற்கும் வடமேற்கு இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பிராந்தியத்தில் நடந்ததற்கு போதிய சான்றுகள் உண்டு. இந்தியாவைக் காட்டிலும் இலங்கையில் தரமான முத்து கிடைத்ததாக கி.மு.4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெகத்தனில் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இக்காலப் பகுதியில் ஆட்சிபுரிந்த இலங்கை மன்னர்கள் சிலர் இந்திய மன்னர்களுக்கு முத்தை பரிசாக கொடுத்ததாக பாளி நூல்கள் கூறுகின்றன. பண்டு தொட்டு வடமேற்கு இலங்கையில் உள்ள சிலாபம் என்ற இடம் முத்துச் சிலாபம் என்ற பெயரை பெற்றிருந்ததற்கு இங்கு நடைபெற்று வரும் முத்துக் குளித்தலே முக்கிய காரணமாகும். பரத என்ற பெயருக்குரிய பிராமிக் கல்வெட்டுக்களில் கணிசமானவை இப்பிராந்தியத்திலிருந்து கிடைத்திருப்பது இத்தொழில்களோடு இவர்களுக்கிருந்த தொடர்பைக் காட்டுகிறது எனலாம்.

 பண்டைய இலங்கையில் மீன்பிடித் தொழிலோடு பரத என்ற பெயருக்குள்ள தொடர்பைக் காட்ட கல்வெட்டுக்களிலோ அல்லது பாளி இலக்கியங்களிலோ இதுவரை சான்றுகள் கிடைக்கவில்லை. ஆனால் அண்மையில் தென்னிலங்கையில் கிடைத்த கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய நாணயம் ஒன்றில் இதற்குரிய சான்று கிடைத்துள்ளது. இங்கு இதே காலத்திற்குரிய உதிரன், தஸபிடன், மஹசாத்தன், கபதிகடலன் போன்ற தமிழ் நாணயங்களுடன் பரததிஸ என்ற பெயர் பொறித்த நாணயம் ஒன்றும் கிடைத்துள்ளது. (டீழிநசயசயஉhஉhi 1999: 53, புஷ்பரட்ணம் 1999: 55 – 70) இதில் காணக்கூடிய சிறப்பு என்னவெனில் பின்புறத்தில் பரததிஸ என்ற பெயரும் முன்புறத்தில் இரு மீன்கோட்டுருவமும் இடம்பெற்றிருப்பதாகும். இதில் வரும் மீன் சின்னங்கள் மீன்பிடி தொழிலோடு பரததிஸ என்பவனுக்குள்ள தொடர்பைக் காட்டுகின்றது. இதில் முன்னொட்டுச் சொல்லாக வரும் பரத என்பது பரதவ சமூகத்தைக் குறிக்கலாம். பின்னொட்டுச் சொல்லாக வரும் திஸ என்ற பெயருக்கு பூச நட்சத்திரம் என்ற பொருள் உள்ளது (இராசகோபால்). இப்பெயர் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களிலும், பாளி இலக்கியங்களிலும் பல இடங்களில் வருகிறது. இப்பெயரில் குறுநில மன்னர்களும், சிற்றரசர்களும் இருந்துள்ளனர். இது பிராகிருத மொழிக்குரிய பெயராக இருப்பினும் இப்பெயரில் தமிழர்களும் இருத்ததற்குப் போதிய சான்றுகள் உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் குடுவில் என்ற இடத்திலுள்ள கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டொன்று தீகவாபி என்ற இடத்தில் வாழ்ந்த திஸ என்ற தமிழ் வணிகன் பற்றிக் கூறுகிறது. அநுராதபுரத்தில் கிடைத்த கல்வெட்டொன்று திஸ தமிழன் தமிழ் வணிகர்களுடன் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறுகின்றது. அண்மையில் தமிழ் நாட்டில் அழகன் குளம் என்ற இடத்தில் கிடைத்த மட்பாண்டை ஓட்டில் தீசன் என்ற பெயர் பெறப்பட்டுள்ளது (இராசகோபால்). பேராசிரியர் சிற்றம்பலம் சங்க இலக்கியத்தில் வரும் திரையர் என்ற ஒரு இனக் குழுவைக் குறித்ததெனக் கொண்டால் அச்சொல்லிற்கும் இலங்கையில் பயன்பாட்டிலிருந்த திஸ, திஸ்ஸ என்ற பெயர்களுக்கும் இடையிலான தொடர்பு ஆராயப்படக் கூடியதென்பதற்கு சில சான்றாதாரங்களைக் காட்டியுள்ளார். திரை என்ற சொல்லுக்கு கடல், கடலலை, குளம் என்ற பல கருத்துக்கள் உண்டு. இலங்கையில் கிடைத்த பரத பற்றிய 21 கல்வெட்டுக்களில் 12 கல்வெட்டுக்கள் திஸ என்பனவை பரதவ (பரத) சமூகத்துடன் தொடர்பு படுத்திக் கூறுகின்றன. இதில் கல்வெட்டுக்களில் வரும் வணிகன், அரச தூதுவன், கப்பல் தலைவன் போன்ற பதவிகள் அனைத்தும் பரததிஸ என்பவனோடு தொடர்புடையதாக உள்ளன. தென்னிலங்கையில் கிடைத்த கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய நாணயம் ஒன்று மீன் அமைப்பில் வடிவமைக்கப்பட்டு அதன் மத்தியில் “திஸஹ” என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. (டீழிநயசய உhiஉhi 1999: 60இ ழே- 43) இதை நாணயமாக கொள்வதைவிட திஸ என்பவனுக்குரிய முத்திரை எனக் கூறலாம். இவற்றிலிருந்து மீன் பிடித்தலோடு பரதவ சமூகத்திற்கும் திஸ என்ற பெயருக்கும் உள்ள தொடர்பு தெரியவருகிறது. இச்சான்றுகள் கடல் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளோடு பரதவ சமூகத்திற்கும் திஸ, திஸய என்ற பெயருக்கும் உள்ள தொடர்பைக் காட்டுவதால் திரையர் என்ற இனக் குழுவுடன் திஸ என்ற பெயருள்ள உறவை தொடர்புபடுத்திப் பார்க்கலாம் என்ற கருத்திற்கு இவை மேலும் சான்றாக உள்ளன. செனிவரட்னா இலங்கையில் பரதவ சமூகத்தின் தோற்றத்தைப் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடர்பு படுத்துகிறார். இதற்கு இச்சமூகம் பற்றிய கல்வெட்டுக்கள், பண்பாட்டு மையங்களை அண்டிக் காணப்பட்டதையே சான்றாகக் காட்டுகிறார். இன்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் பரதவ சமூகம் வாழ்ந்து வரும் இடங்களில் வட, வடமேற்கு இலங்கை சிறப்பாக குறிப்பிடத்தக்கது. இவற்றுள் பூநகரி வட்டாரத்திலுள்ள மண்ணித்தலை என்ற கடற்கரைக் கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வின்போது பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய பல சான்றுகளுடன் குறிப்பாக கறுப்பு சிவப்பு நிற மட்பாண்டங்கள் (டீடயஉம யனெ சநன றயசந) தமிழ் பிராமி எழுத்துப் பொறிந்த மட்பாண்ட ஓடுகள், இரும்புக் கருவிகள் என்பவற்றுடன் மீன் பிடிப்பதற்கென ஊசிகளும் (குiளா ர்ழமள) கிடைத்துள்ளன. (புஷ்பரட்ணம் 1993). பரத என்ற சொல்லின் இன்னொரு வடிவமாக கல்வெட்டுக்களில் வரும் பத என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் இப்பெயருக்குரியவர்கள் இலங்கையில் பரந்துபட்ட அளவில் வாழ்ந்தனர் எனக் கூறலாம்.



 இவர்கள் வர்த்தகத்தில் மட்டுமன்றி அரசியல், கிராம நிர்வாகம், நீதி, படைத்துறை, கலை போன்ற பல துறைகளில் ஈடுபட்டிருந்தமை தெரிகிறது. குத்திக்குளம் என்ற இடத்தில் உள்ள கல்வெட்டு பதகுமார என்பவன் பௌத்த சங்கத்திற்கு அளித்த தானம் பற்றிக் கூறுகிறது. இதில் வரும் பதகுமர என்பதை பரதகுமார என எடுத்துக்கொள்ளலாம். சங்க காலத்தில் சிலப்பதிகாரம் பரதவ குமாரன் என அழைத்ததற்கு சான்றுண்டு. (சிலப் 156) அண்மையில் சேருவில் என்ற தமிழ் கிராமத்தில் கிடைத்த கல்வெட்டில் பதகம திஸ்ஸவும், தமிழ் சோழவும் (தமிட சுட) இணைந்து பௌத்த சங்கத்திற்கு தானம் அளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (ளுநநெஎசையவநெ 1985: 52). இதில் சோழர் தமிழராக குறிப்பிடப்பட்டமை சிறப்பாக நோக்கத்தக்கது. வட இலங்கையில் பதசுட என்ற சொல் சில கல்வெட்டுக்களில் வருகின்றன.

 மேற் கூறப்பட்ட கல்வெட்டுக்களில் இருந்து சங்ககாலத்தைப் போல் சமகாலத்தில், இலங்கையிலும் பரதவ சமூகம் வாழ்ந்ததெனக் கூறலாம். சங்க இலக்கியத்தில் பரவர், பரதவர் என வரும் பெயர்கள் இலங்கைக் கல்வெட்டு மொழிக்கு ஏற்ப பத, பரத என மாற்றமடைந்திருக்கலாம். இதற்கு கல்வெட்டுக்களில் வரும் பிராகிருதமயப்படுத்தப்பட்ட தமிழ்ப் பெயர்கள் சம காலத்தில் வெளியிட்ட நாணயங்களில் தமிழில் இடம்பெற்றிருப்பதைச் சான்றாக கூறலாம். செனிவரட்னா பரத என்ற முன்னொட்டுச் சொல் திராவிட மொழிக்குரிய ஆய், மாற, மருமக என்ற பெயர்களுடனும், பிராகிருத மொழிக்குரிய சும, உதர, சுமலி போன்ற சொற்களுடனும் வருவதைச் சுட்டிக்காட்டுகிறார். ஆரம்பத்தில் இனக் குழுவைக் குறித்த பரதவ என்ற பெயர் பின்னர் சமூகப் பெயராக மாறியதாக ஒரு குருத்துண்டு. Nஐம்ஸ் ஆர்னலின் பரதவர், பரவர், பரதர் ஆகியோர் நாக இனக்குழுவை சார்ந்தவர் எனக் கூறுகிறார் (முருகானந்தம் 1990, 3) வட இலங்கை நாகதீவு எனவும், நாகர்கள் வாழ்ந்த இடம் எனவும் கூறும் வரலாற்று மரபுண்டு. இலங்கையில் பரத பற்றி வரும் கல்வெட்டுக்கள் பெருமளவுக்கு வட இலங்கையிலும், வடமேற்கு இலங்கையிலும் காணப்படுவதுடன் சில கல்வெட்டுக்களில் பரதநாக என்ற பெயர் இணைந்து வருவதையும் காணலாம். இதனால் பரத என்ற சமூகப் பெயர் இலங்கையில் வேறுபட்ட இனக் குழுக்களிடையே சமூகப் பெயராகப் பயன்படுத்தப்பட்ட போதிலும் அதன் செல்வாக்கு கூடிய அளவுக்கு வட, வடமேற்கு இலங்கையில் இருந்ததெனக் கூறலாம். இன்று பரதவ சமூகம் தமிழ் நாட்டில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய திராவிட மொழி பேசும் பிராந்தியங்களிலும், இலங்கையில் சிங்கள, தமிழ் மொழி பேசும் வட்டார மக்களிடமும் காணப்படுகின்றன. வட, வடமேற்கு இலங்கையில் இப்பரதவ சமூகம் நீண்ட காலமாக வாழ்ந்து வருவதை இடைக்கால, மத்தியகால வரலாற்று ஆவணங்களிலிருந்து அறியமுடிகிறது. இதனால் இச்சமூகத்தின் தொடக்க கால ஆதாரமாக இப்பிராந்திய த்தில் காணப்படும் கல்வெட்டுக்களில் வரும் பரத என்ற பெயரைக் குறிப்பிடலாம்’’
மேற்கூறியன அனைத்தும் பரவர்கள் வர்ண குலத்தினர் தோர்றம் பரவல் , பற்றி வழங்கி வரும் பதிவுகளாகும் இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருந்தாலும் வர்ணகுலம் பற்றிய தொன்மையயையும் அதன் தொடர்ச்சியயையும் நமக்கு உணர்த்தி நிற்கிறது.
வர்ணகுலம் வர்ணகுலத்தான் குருகுலத்தான் எனவரும் தொடர்களும் மீகமன் பற்றிய குறிப்புகளும்வெடியரசன் பற்றிய நம்பிக்கைகளும் இம் மரபினரின் தொடர்ச்சியான இருப்பையும்நீட்சியயயும் வலியுறுத்துகின்றன.சிலப்பதிகாரத்தின் வழிவந்த ‘’கண்ணகி வழக்குரை’’ காவியம் மீகாமன் பற்றிய செய்திகளை தருகிறது.கண்ணகியின் காற்சிலம்பில் பதிக்க கூடிய நாகமணியயை தென் திசையில்தென் திசையில் உள்ள நாகத்தீவிலிருந்து கொண்டு வரக் கூடியவன் மீகாமனே என சொல்கிறது.
‘’கூட்டி வந்தார் வருணர் தமை குறையறுத்து கரை நீளும்
வாட்டமற வைத்த நாளின் வளங்கிய பேர் கரையார் காண்
பாட்டிலவர் தம் பெருமை பகரவினித் தொலையாது
மீட்டு புகழ் மீகாமன்சிறந்த மரபென உரைத்தார்’’
இது போலவே பரதர் குலத் தெருவில் வசித்து வந்தமீகாமனை அழைத்து வந்த செய்தியில்
‘’எல்லையிலா புகழ் பரதர் இருக்குமந்த தெரு புகுந்து
மல்லையொத்த புயத்தானே வர்ணகுலத்துதித்தோனே''
என மீகாமனின் வீரத்தை குறிப்பிடுகிறது.
கண்ணகி குளிர்த்தியில்
‘’மீகாமனுக்கு மிகுந்த வரம் கொடுத்து
நாகமணி வாங்கவெண்று நயந்தாய் குளிர்ந்தருள்வாய்’’'
என வரும் வரிகளும் மீகாமன் பற்றிய செய்தியயை நமக்கு தருகிறது.
திருகோணமலியின் வரலாற்றையும் வளமைகளையும் கூறும் கோணேசர் கல்வெட்டு கொட்டியாரத்தில் கோணேசர் ஆலயத்துக்காக கொடுக்கப் படும் பொருட்கள் கெவுளிமுனையிலுள்ள மீகாமனிடம் சேர்ப்பிகப் படவேண்டும் எனக் குறிப்பிடப்பிடுகிறது இங்கு மீகாமன் ஒரு தலைவனாக காட்டப் படுவதை காணலாம்.
கோணெசர் கல் வெட்டு வேறு ஒரு தகவலையும் நமக்கு தருகிறது கொட்டியாரத்தில் கூட்டப்பட்ட தேசத்தார் கூட்டத்தில் ஏழூர் அடப்பன் பற்றிய குறிப்பு வருகிறது. அடப்பன் அடப்ப்னார் என்ற பெயர்கள் ஒல்லாந்தர் கால குறிப்புகளின் படி குருகுலத்தவருக்குரிய தலைமைக் காரரின் பெயர் என விளங்கிக் கொள்ள முடிகிறது.இப்படிப் பார்க்கும் போது கோணெசர் கல்வெட்டு கூறும் காலப் பகுதியில் கொட்டியாரத்தின் ஏழு ஊர்கள் குருகுலத்தவர்களுக்கு உரியதாக இருந்திருக்கிறது என புலனாகிறது.
‘’முக்கறு கற்றன’’ எனும் சிங்கள ஏட்டுச் சுவடீப்படியொரு குறிப்பை தருகிறது.’’7740 வீரர்கள் கொண்டகரவ சேனை கொர மண்டலம் என அழைக்கப் படும்காஞ்சிபுரம் ,காவிரிப் பூம் பட்டினம்,கீழைக் கரைஆகிய குருகுலப் பிரதேசங்களிலிருந்து வந்ததையும்,முக்குவரையும் துலுக்கரையும் போராடி வென்றனர் என்பதயும்விபரிக்கிறது.கோட்டை இராசதானியின் 6ம் பராக்கிரம பாகுவே(1412-1467)இவர்களை அழைத்தான் என்றுமவர்களுக்கு பல வீதிகளையும் வசிப்பிடங்களையும் 18துறைமுகங்களையும் வரியின்றி கொடுத்தான் என பிறிற்றோவின் யாழ்ப்ப்பாண சரித்திரம் கூறுகிறது’’
சோழப் பேரரசன் இராசேந்திர சோழன் இலங்கை மீதான படையெடுப்பை கூறும் திருமுருக கூடல் கல் வெட்டில்சிங்கள இராணுவத்தின் வீழ்ச்சியயயுமதில் தங்க கால்வளை அணிந்த குருகுலத்தராயன் வீழ்ந்து மடிந்ததும் கூறப் பட்டுள்ளது.
குருகுல மக்கள் வீரம் செறிந்தவர்களாகவும்போர்த்திறன் மிக்கவர்களாகவும் இருந்தமைக்கான சான்றுகள்பரவிக் கிடக்கின்றன வர்ணகுலத்தவர் பற்றிய புராணக்கதையொன்று “ஜலப் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழிந்து நீரால் நிறைந்த போது மீகாமன் தோணி மட்டுமே வெள்ளத்தில் மிதந்ததாகவும் சிவபெருமானும் வெள்ளத்தில் தத்தளிக்க சிவன் தன்னை ஓடத்தில் ஏற்றும் படி கேட்க சிவனை கைதூக்கி விடாமல் வள்ளத்தை ஒருக்கணித்து ஏற இடமளித்த போது “உள்ளமும் கரயான் உகத்திலும் கரையான்’’ என கூறியதாக இப்படி சொல்கிறது.
வர்ணகுலத்தாரின் கொடி மகரம் மகரக் கொடி. மகரம் என்பது யானையின் தந்தத்தையும் சிங்கத்தின் கால்களையும்,பன்றியின் காதையும்,மீனின் உடலையும்,வெளித்தெரியும் பற்களையும்,குரங்கின் கண்களையும் அழகான தோகையயையும் கொண்ட கடற் பிராணியாகும்.அது பிரபஞ்சம் தழுவிய குறியீடாக அடையாளப் படுத்தப் படுகிறது.
வட இந்தியாவின் குருகுல வம்சத்தோடுஉறவு கொண்ட பாண்டிய அரசர்கள் மகரத்தை தமது அடையாள சின்னமாக கொண்டனர் என நம்பப் படுகிறது.மகரம் எங்கள் குருகுல வம்சத்தின் அடையாளம் என வலைவீசு புராணம் சொல்கிறது.
கெறாஸ் அடிகளாரின் ஒரு கூற்றையும் கவனத்தில் கொள்ளலாம்"மொகஞ்சதாரோ களி மண் முத்திரையில் காணப்படும் மீன்களும் சந்திரனும் அவர்களது மூதாதயரான பாண்டிய மன்னனையும்கரையோரப் பரவ மக்களையும்குறிப்பதாகுமங்கு காணப்படும் எட்டு நட்சத்திர அடையாளங்களுள் நண்டு இரு சோடி மீன்கள்,மகரம் ஆகியன இடம் பெறுகின்றன.''
திருகோணமலை கோட்டை வாசலில் பொறிக்கப் பட்டுள்ள மீன் லச்சினைகளையும் இதனுடன் பொருத்திப் பார்க்கமுடியும்

கோணேசர் கல் வெட்டில் கூறியுள்ளபடி 
''பாடல்16 
 திருமலைக்கு நாற்காத வழி திருத்தித் தானும் கோண
மான பரற்கென அளித்தேன் கொட்டியாரப் பகுதியோர் மகிழ்த்தே
செய்தல்
ஆன துவர்க்காயினுடன் வெள்ளிலையும் அருங்கதலிக் கனியும்
சாந்தும்
ஊனமறு பால் தயிர் நெய் அரிசி ஒரு நூறு அவணம் உகந்தே ஈதல்
கொட்டியாரப்பற்றில் நான்கு காத வழி தூரத்திற்கு உற்பத்தி விளை நிலங்களை உண்டாக்கி கோணேசப்பெருமானுக்கென கொடுத்தேன் அந்தக்கொட்டியாரப்பற்றில் வாழ்பவர்கள் மகிழ்ந்து செய்ய வேண்டியது யாதெனில் கோணெசர் கோயிலுக்கு பாக்கும்வெற்றிலையும்,வாழைப்பழமும்,சந்தணமும்,குற்றமற்ற பால்,தயிர் நெய்யும் நூறு அவண அரிசியும் கொடுத்துவரவேண்டும்
17ம்பாடல் ஈதலுடன் ஏரண்டம் இருப்பை புன்னைப்பருப்பு இவைகள் இறையாத்தீவில்
சேமமுற ஒப்புவிக்கச் செக்காட்டி எண்ணையுற திருந்த ஆட்டி
ஓதரிய கெளளிமுனை மீகாமனிடத்தில் வரவு வந்தே கோண
தீதமுற குருகுல நற் கணக்கில் உள்ளபடி நிறைவாய் ஊற்றல்
இலுப்பை புன்னைப்பருப்புக்களை இறையாத்தீவில் உள்ளவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் அவைகளை அவர்கள் செக்கிட்டு ஆட்டி ,எண்ணெய் வகைகளை தனித்தனியே ,எடுத்துச்சென்று சொல்லுதற்கரிய கெளளிமுனையிலுள்ள மிகாமனிடத்தில் கொடுக்க வேண்டும்.அதை அவர்கள் ஏற்றிவந்து கோணெசர் கருவூலத்தில் குருகுலத்தார் கணக்கில் வரவு வைக்க வேண்டும்''
கொட்டியாரக் கணக்கு குருகுலத்தார் கணக்கென்றே சொல்லப் படுகிறது.

இன்றும் சேனையூர் மக்களின் வம்சக் கொடியாக மகரமே பயன் பாட்டில் உள்ளது. மாடுகளுக்கு சுடப்படும் குறி அடயாளமாக மகரமும் ஈர்க்கிலையும் பொறிக்கப் படுகிறது.மரண வீட்டில் செய்யப் படும் தேரில் மகரக் கொடியே பறக்க விடப் படுகிறது .
திருகோனமலை மாவட்டத்தில் தென்னமரவாடி,திரியாய்,குச்சவெளி,கும்புறுபிட்டி,நிலாவெளி,சாம்பல்தீவு,சல்லி,தம்பலகாமம் ,கந்தளாய்,ஆலங்கேணி,திருகோனமலை நகரும் நகரை அண்டிய சூழலும்,மூதூர்,சேனையூர்,கட்டைபறிச்சான்,கடற்கரைச்சேனை,கெவுளிமுனை,சூடைக்குடாஆகிய இடங்களில் வர்ண குல மரபினரின் படர்ச்சி காணப் படுகிறது.
எங்கோ தொடங்கிய ஒரு வேர் சேனையூர் வரை தொடர்கிறது.கிழக்கு மாகாணத்தில் தென்னமரவாடி தொடக்கம் திருக் கோவில் வரை வர்ணகுல மரபும் மீகாம பரம்பரை தொடர்ச்சியும் நீண்டு செல்கிறது.

 பலநூல்கலிலிருந்து பெறப் பட்ட தகவல்களையும் ஆங்காங்கே பலர் இணயத்தில் எழுதிய குறிப்புக்களையும்  என் மூதாதயர் வழி வந்த குறிப்புகளையும் இணைத்து இந்த கட்டுரை தொப்புஎழுதப் பட்டுள்ளது.ஒரு குல மரபின் தொடர்ச்சியென்பது வரலாற்றின் வழியே வருகிரது என்பது நிருபணமாகிறது.

Friday 30 October 2015

சேனையூரும் வர்ண குல மரபும்

                 
சேனையூரும் வர்ண குல மரபும்
  பாலசுகுமார், முன்னாள் கலை கலாசார பீடாதிபதி,கிழக்குப்     பல்கலைக்கழகம்
                             
சேனையூரின்  மத்தியில் அமைந்திருக்கும் வர்ணகுலப் பிள்ளையார் ஆலயம்,ஒரு குல மரபின்  சாட்சியாய் தலை நிமிர்ந்து நிற்கிறது.மனித குல வரலாறு இன்று குல மரபுக் கதைகளுக்கும் இன வரை முறைகளுக்கும்,குடி வழி முறைமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டு வருகிறது.வரலாறு குறித்த வரையறைகள் இன்று மாறியுள்ளன.பொதுமைப் படுத்தப் பட்டு எழுதப் பட்ட முறைமை மாறி குழுக்களின் வரலாறு வட்டார வரலாறு என வகைமைகள் மாறியுள்ளன.வட்டார வரலாறு முக்கியப் பட்டுள்ள இன்றய சூழலில் மானிடவியலாளர் பக்கவத்சலப் பாரதி இப்படி கூறுவார்.
''வட்டார வரலாறுஎன்பது குறிப்பிட்ட புவியியல் பரப்பு சார்ந்தபிராந்தியத்துக்கான வரலாற்றை குறிக்கும்.இதில் எண்ணற்ற வரலாற்று கூறுகள் அடங்கியுள்ளன.இத்தகய வரலாறு இடம் பற்றியதாக இருக்கலாம்,முக்கியத்துவம் கொண்ட ஆறு மலை குளம் பற்றியதாக அமையலாம்,அப்பிரந்தியத்தின் சமூகங்கள் பற்றியதாக இருக்கலாம்,சமூக நாயகர்கள் வரலாற்றில் இடம் பிடித்தவர்கள்,விடுதலை வீரர்கள், மதகுருமார்கள் பற்றியதாக அமையலாம்.கோயில் விழாக்கள் சாமிகள்,வழிபாட்டு மரபுகள்,வீர விளையாட்டுகள்பிற பண்பாட்டு நிகழ்வுகள் பற்றியதாகவும் இருக்கலாம்''
எல்லோரும் தங்கள் மூல வேர்களை தேடி அறிவதில் ஆவலாய் இருப்பர்.அதன் வழியே வர்ணகுலம் பற்றி அறிய முற்ப்பட்ட போது  ஆச்சரியத் தக்க தகவல்கள் கிடைத்தன.சேனையூரின் பிரதான குல மரபாக நாம் இனம் காண்பது வர்ண குல மரபே ஆகவே நாம் வர்ணகுல மரபின் மூலத்தை தேடிப் பயணிக்க வேண்டியவர்களாய் உள்ளோம்.
வர்ணகுலம் குருகுலம்,பரதவர்,கரையார்,பரவர்,பெளரவர்,கரவா,பரதர் என வரும் பெயர்கள் ஒரே குலத்தினரை குறிப்பதாகவே உள்ளது என பல்வேறு ஆரச்சியாளர்களின் முடிவாக உள்ளது   எம் .டி.ராகவன் போன்ற தொல்லியலாளர்கள்  இதனையே நிறுவுகின்றனர்.
வித்துவான்  சோ.க..இராமநாதபிள்ளை எழுதிய ''பரத வம்ச விலாசம்''  என்கிற நூல்  வற்ணகுலம் பற்றிய பல தகவல் களை இதிகாசங்களுடனும் புராணங்களுடனும் தொடர்பு படுத்தி சொல்கிறது
''பூர்வ காலத்தில் அஸ்தினாபுரியை ஆண்ட சந்தரவம்ச அரசர்களில் புரூருவன் என்பவரை முதல் தலைமுறையாகக் கொண்டு இருபதாவது தலைமுறையில் தோன்றிய துக்ஷ்யந்த ராஜனிடம் பரதன் என்ற அரசன் தோன்றினான்.
பாகவத புராணம் முதற்பகுதி அத்தியாயம் 21-ம் செய்யுளில், பரதனுக்கு இணையாக இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் என்ற முக்காலத்திலும் மனுநூல் ஆட்சிசெய்த மன்னர் எவருமில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே பரதனின் ஆட்சி காலத்திலிருந்து சந்திர வம்சமானது “ பரதவம்சம் ” என்றும், பரதனின் குலத்தவர் “ பரதவர் ” என்றும் அழைக்கப்படலாயினர்
உவின்சலன்துரை அகராதியில், “பரதவர் நெய்த நில மக்களாகிய மீன்பிடி குலத்தவர், பரதன் என்ற அரசனால் இந்தப் பெயர் வழங்கலாயிற்று,” என்று காணப்படுகிறது.
வீராமுனிவரின் சதுரகராதி, “ பரதவர் நெய்தல் நில மக்கள், ” என்று கூறுகிறது. இலங்கை சுமங்கல சுவாமிகள் இயற்றிய “ ஹித்தியாச வருணநாவ ” என்ற நூலில் பரதர் வம்சத்தினருக்குப் “ “ “ பரவர் ” என்னும் மற்றொரு பெயர் உண்டு என்றும், புதன் மகன் புரூருவனால் “ பெளரவர் ” என்றப் பெயர் பெற்று, வடமொழிச் சொல்லான “ பெளரவ ” என்பதின் தமிழ் வடிவமே “ பரவர் ” என்றும் கூறப்பட்டுள்ளது.
பரதரது பூர்வ சரித்திரம் பாரத இதிகாசத்தில் விஸ்தாரமாய் விவரிக்கப்பட்டுள்ளது. அவ்வம்சத்தின் பாரம்பரிய சரித்திரத்தின் சுருக்கமான வரலாறு கீழ்வருமாறு:
“ முதலில் சந்திரன் என்பவன் புதனைப் பெற்றான். புதன் புரூருவனைப் பெற்றான். புரூருவன் ஊர்வசியுடன் கூடி ஆயு என்பவனைப் பெற்றான். ஆயுவுக்கு நகுடன் பிறந்தான். இந்த நகுடன் அரசாண்ட போது பெற்ற மூன்று ஆண் மக்களில் மூத்த புதல்வன் யயாதி ஆட்சி உரிமை பெற்றான். இந்த யயாதி முதல் துக்ஷ்யந்தன் வரையுள்ள 11 தலைமுறை முறையே:
யயாதி – புரூருவன் – ஜனனேஜயன் – பிரசாவன் – சாயதி – சார்வபெளமன் – அரிசிகன் – மதிவான் – திடன் – நீலன் – துக்ஷ்யந்தன்.
துக்ஷ்யந்தன் மகாராஜனுக்குச் சகுந்தலையிடம் பரதன் பிறந்தான். பரதனின் மகன் பெளமன், இவன் மகன் சுகோத்திரன்; இவன் மகன் அஸ்தன். இந்த அரசனால் ஏற்பட்ட நகரத்துக்கு அஸ்தினாபுரம் என்று பெயர். இவனுக்கு நிகும்பன் பிறந்தான். அவனிடம் அரசமீளி பிறந்தான். அவனுக்கு வருணன் பிறந்தான். வருணனிடம் குரு உற்பவித்தான். இந்தக் குரு அரசனால் பரத வம்சத்தினர் “ கெளரவர் ” என்ற பெயர் பெற்றனர். இவன் யாகஞ் செய்த இடத்திற்கும், அரசாண்ட நாட்டிற்கும், குருக்ஷேத்திரம் என்ற பெயர் வந்தது.
குரு அரசனுக்கு பிரதீபனும், அவனிடம் பிறந்த தேவாபி, சந்தனு என்ற இரு மக்களில் மூத்தவன் தேவாபி காட்டில் தவம் செய்யச் சென்றதால், இளையவன் சந்தனு அரசாள உரிமைப் பெற்றான்.
சந்தனு அரசன் முதலில் கங்கை என்ற பெண்ணை மணந்து பீக்ஷ்மன் என்பவனைப் பெற்றான். பின்னர் பரதவம்சத்தின் திலகனாய் விளங்கிய தாசராஜன் புதல்வியும், வியாசரது தாயுமாகிய சத்தியவதியை மணந்து, சித்திராங்கதன் – சித்திரவீரியன் என்ற இரு புதல்வர்களைப் பெற்றான். சித்திராங்கதன் இளமையிலேயே இறந்ததால், சித்திரவீரியனுக்கு காசிராஜனின் இரு புதல்விகளையும் திருமணம் செய்விக்கப்பட்டு முடியுஞ் சூட்டப்பட்டது. இவன் மக்கட்பேறு இல்லாது இறக்கவே, இவனது மனைவிகளிடம் வியாசர் கூடி திருதராக்ஷடிரன் – பாண்டு என்று இரு புதல்வர்களைப் பெற்றார். திருதராக்ஷடிரனுக்கு துரியோதனன் முதலிய நூற்றுவர் பிள்ளைகளாவர். பாண்டுவுக்கு யுதிக்ஷ்டிரன் முதலிய வர் பிள்ளைகளாவர்.
இந்த நூற்றுவர் மற்றுமஅவர் காலத்தில்தான் மகாபாரத யுத்தம் நடந்தது. கூர்ச்சாத்து அரசனான கிருக்ஷ்ணன் பாண்டவர்கட்கு உதவி செய்ததால், பாண்டவரே யுத்தத்தில் வென்றனர்.
கிறிஸ்து பிறப்பதற்கு ஏறத்தாழ 4400 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது தான் இந்த மகாபாரத யுத்தம். இதற்கு பிறகும் , சில காலம் பரத அரசாட்சி அஸ்தினாபுரத்தில் நிலைத்து வந்தது''
''மேற்கூறிய சந்திர வம்சத்தினரான பரதரும், மதுராபுரியை ஆண்டு வந்த பாண்டியரும் ஒரே வம்சத்தினர் என்று ,வில்லிபாரதம் கன்னபருவம் 17-ம் நாள் போர்புரிச் சுருக்கம் 106-ம் செய்யுளில் கூறப்பட்டுள்ளது
பரதரின் தலைநகரான அஸ்தினாபுரியிலிருந்து பாண்டுவின் புதல்வர்கள் வரில் அருச்சுனன் தீர்த்தயாத்திரை செய்தபோது, மதுக்கரை (மதுரை) க்கு அடுத்த பூழி என்ற மணலிபுரத்தை அடைந்து, அங்க ஆட்சி செய்த சித்திரவாகு பாண்டியனின் ஏக புதல்வியை கண்டு அவளை மணங்கொள்ள விரும்பினான். மன்னன் பாண்டியன் தன் மகள் வயிற்றில் பிறக்கும் குழந்தையை மதுரை அரசாட்சிக்கு உரியதாக்கும் பட்சத்தில், அருச்சுனன் விருப்பத்திற்கு உடன்பாடு தெரிவித்தான். அருச்சுனன் சித்திரவாகு பாண்டியன் மகள் சித்திராங்கதையை மணந்து, பப்புருவாகனன் என்ற மகனை பெற்றுப் பாண்டியனிடம் ஒப்படைத்து, மனைவி சித்திரங்காதையுடன் சென்றான்.”
கி.பி.1735-ம் ஆண்டு தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட வேத அகராதியில், பூரு என்னும் அரசன் முதல் கூன் பாண்டியன் வரை மொத்தம் 364 பாண்டியர்கள் இருந்தார்கள் என்று கூறப்படுகிறது.
அருணாசலப் புராணம் வச்சிராங்கத பாண்டியன் சருக்கம் 411-ம் செய்யுளில் கூறப்பட்டது போல, பரத வம்சமும் பாண்டிய வம்சமும் ஒன்று என எவர்க்கும் நன்கு புலப்படும்.
காசி செட்டித்துரை எழுதிய கெஜற்றியர் என்ற ஆங்கில நூலிலும் இதுதான் கூறப்பட்டுள்ளது.
பரத குலத்தவர்க்கு உரிய கொடிகள் 211-ல் மீன் கொடியும் ஒன்று. பாண்டியனுக்கு உரிய கொடியும் மீன் கொடியாகையால், பரதவரே பாண்டியர் என்று அவர்களது துவஜம் (அதாவது, கொடி) சாட்சி பகருகின்றது.
நெய்தல் நிலத் தலைவனே கடற்சேர்ப்பன் என்றும், அவனே பாண்டியன் என்றும், அவனது குலத்தவரே பரதவர் என்றும் சூடாமணி நிகண்டு மக்கட் பெயர்த் தொகுதியிலும் , நாலடியார் – பழமொழி முதலிய சங்கச் செய்யுட்களிலும் கூறப்படுகின்றது.
வீரமாமுனிவர், வின்ஸ்லோ துரை இவர்களின் அகராதிகளில் , நெய்தல் நில மக்களைப் பரதர் என்று காணப்படுகின்றது. எனவே, பரத குலமே பாண்டிய குலமென மயக்கமின்றி தெளிவாகும்.
பரத வம்சத்தைப் பற்றிய மற்றொரு வரலாறு, பதினெட்டுப் புராணத்தில் ஒன்றான பிரமபுராணத்தின் மூன்றாவது காண்டத்தில் கூறப்பட்டுள்ளது. அது:
“சக்கரபுரிப் பட்டணத்தில் அரசாண்டு வந்த சுரா பாண்டியன் என்பவனின் புதல்வன் அமிர்தபாண்டியன். இவனுக்குப் பிறந்த ஏழு பிள்ளைகளில் மூத்தவன் காந்தவீரிய பாண்டியன். இந்த அரசன் தனது சகோதரர்களுடன் வேட்டையாட காட்டிற்குச் சென்றபோது களைப்புற்றதால், தனது தம்பியான குலசேகர பாண்டியனை தாகத்திற்கு தண்ணீர் கொண்டுவரப் பணித்தான். தண்ணீர் கொணர்வதில் கால தாமதஞ் செய்த தம்பிமீது சினங்கொண்டு, அவனை தங்களை விட்டு நீங்குமாறு கட்டளையிட்டான். அக்கட்டளையின்படி, குலசேகர பாண்டியன் தென் பகுதியில் மணவூர் என்னும் இடத்தில் உள்ள சமணராஜன் நகரில் மீன் பிடித்து விற்று ஜீவனம் செய்து வந்தான். இதையறிந்த சமணராஜன் தனது புதல்வி சுலோதையம்மாளை குலசேகர பாண்டியனுக்கு மணமுடித்து, ஆண் சந்ததியில்லாத தனது ராச்சியத்தையும் அவனுக்கே அளித்து ராஜபட்டம் சூட்டுவித்தான். குலசேகர பாண்டியன் மீன்பிடி தொழில் புரிந்தமையால், மீன்கொடி கட்டிச் சந்திர குலத்திற்கு அரசனாய் இருந்து, தனது வம்சத்திற்குரிய பாண்டியன் என்ற பெயர் பெற்று விளங்கினான்.”
மானிடவியல் அறிஞர் *எட்கர் தர்ஸ்டன்* அவர்கள் தான் எழுதிய *“தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்”* (”Castes and Tribes of South India”-(Edgar Thurston – 1909))என்ற ஆய்வு நூலில், *“பரவன்”* (Paravan) என்ற குலத்திற்குரிய மானுட வாழ்வின் பிறப்பு, இறப்பு, கல்வி, வழிபாட்டுச் சடங்குகள், திருமணம், ஆட்சியியல் நிலை ஆகியவற்றை நன்கு ஆராய்ந்து விளக்கியுள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழக நூலகக் குழுவின் தலைவரான எட்கர் தர்ஸ்டன், 1885-ல் சென்னை அருங்காட்சியகப் பொறுப்பாளராகவும் பணியாற்றினார். மேற்கூறிய நூலின் தமிழாக்கம் ,
தென் கிழக்குக் கடற்கரையைச் சார்ந்த “பரவர்”, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கடற்கரையில் உள்ள துறைமுகப் பட்டணங்களிலும் இலங்கையின் வடமேற்குக் கடற்கரை மாநிலங்களிலும் காணப்படுகின்றனர்.
பரவரின் தோற்றம் பற்றி வழங்கிவரும் வரலாறுகள், *சைமன் காசி செட்டி* எழுதிய *“பரவர்களின் தோற்றமும் வரலாறும்”* என்ற கட்டுரையில் (Origin and History of the Paravars by Simon Casie Chitty – 1873 Journal Roy.As.Soc.IV) கீழ் கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
1) 1735-ல் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட *“கிறிஸ்தவ திருச்சபையின் வரலாற்றின்“* ( The Historia Ecclesiastica) ஆசிரியர், பரவர்களை மறைநூல்களில் கூறப்பட்டுள்ள பர்வையம்கள் (Parvaim of the Scriptures) என்று வகைப்படுத்துகிறார். மேலும் பரவர்கள் , சாலமன் அரசர்(King Solomon) காலத்தில் கடற்பயணங்கள் மேற்கொள்வதில் புகழ் பெற்றவர்கள் என்றும் கூறுகிறார்.
2) பரவர்கள் தங்களை *அயோத்தி*யினைச் (Ayodhya) சேர்ந்தவர்கள் எனவும் , மகாபாரதப் போர் நிகழ்வதற்கு முன்னர் யமுனைக் கரையில் வாழ்ந்து வந்ததாகவும் கூறிக்கொள்வார்கள்.
3) பரவர்களிடையே அவர்களது தோற்றம் பற்றிய பல வரலாறுகள் புராணக் கதைகளோடு தொடர்புடையனவாக காணப்படுகிறது.
பரவர்கள் தங்களைக் கடல் தெய்வமான *வருணனின்* வழிவந்தவர்கள் எனக் கூறிக்கொள்வதோடு, சிவன் அசுரர்களை வெல்லப் போர்க்கடவுளான கார்த்திகேயனைப் படைத்தபொழுது சரவணப்பொய்கையிலிருந்து அவனுடன் கூடத் தோன்றிய கார்த்திகைப் பெண்களால் அவனைப் போலவே வளர்க்கப்பட்டவர்கள் என்றும் கூறிக்கொள்கிறார்கள். கடந்த யுகத்தின் முடிவில் உலகம் முழுவதும் நீரால் மூடப்பட்டு மூழ்கிய போது பரவர்கள் ஒரு தோணியினைக் கட்டியதாகவும், அதில் ஏறிக்கொண்டு பேரழிவிலிருந்து தப்பியதாகவும், பின்னர் நீர்வற்றி மீண்டும் நிலம் புலப்பட்டு தங்களது தோணி தரைதட்டியபோது, அந்த இடத்தில் குடியமர்ந்து அதற்கு *தோணிபுரம்* எனப் பெயரிட்டதாகவும் கூறப்படுகின்றன.
4) பரவர்கள் ஒரு காலத்தில் செல்வாக்கு உடையவர்களாகவும், கடற்பயணம் பற்றிய தங்களது அறிவின்காரணமாக மற்றச் சாதியர் மீது அதிகாரம் செலுத்துபவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்களுள் *“ஆதியரசன்”* என்ற பட்டப்பெயர் கொண்ட அரச வம்சம் இருந்துள்ளதாகவும், அதில் சிலர் *“மங்கை”* என்ற பெயருள்ள நகரிலிருந்து ஆண்டதாகவும், இந்நாளில் அது *“உத்தரகோசமங்கை”* என்ற பெயருடன் இராமநாதபுரம் அருகே விளங்குவதாகவும் கூறப்படுகின்றது.
5) *“வலைவீசு புராணம்”* என்ற புராணத்தில் பின்வரும் கதை கூறப்பட்டுள்ளது. சிவனின் மனைவி பார்வதியும் மகன் கார்த்திகேயனும் சொல்லக்கூடாத சில இரகசியங்களை வெளியிட்டதால் தேவலோகத்திலிருந்து வெளியேறும்படி பணிக்கப்பட்டனர். அவர்கள் பல மானிட பிறவிகள் எடுத்த பிறகே மீண்டும் தேவலோகத்தில் அனுமதிக்கப்படலாம் எனச் சாபம் பெற்றனர். பார்வதியின் வேண்டுகோளுக்கு இணங்கிய சிவன், அவர்கள் குற்றத்திற்கு தண்டனையாக ஒரு மானிட பிறவி மட்டும் எடுத்தால் போதுமானது என்று அவர்களுக்கான தண்டனையைக் குறைத்தார்.
இந்த வேளையில் பரவனின் அரசன் *திரியம்பகனும்* (Triambaka) அவனது மனைவி *வருணவள்ளியும்* (Varuna Valli) புத்திரப்பாக்கியத்திற்காக தவம் புரிந்து கொண்டிருந்த படியால், பார்வதி அவர்களுடைய மகளாகப் பிறந்து திரைசேர்மடந்தை (Tiryser Madente) என்று பெயரிடப்பட்டாள். கார்த்திகேயன் ஒரு மீனாக உருவெடுத்தான்.
வடகடலில் மீனாகத் திரிந்துகொண்டிருந்த கார்த்திகேயன், மிகப்பெரிய மீனாக வளர்ந்து தென் கடலுக்கு வந்து, பரவர்களின் மீன்பிடிக் கலங்களையெல்லாம் தாக்கி வந்தான். பரவர்களின் தொழில் சீரழிந்து வருவதை பரவர்களின் அரசன் *“திரியம்பகனன்”* , அந்த மீனைப் பிடிப்பவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்குத் தனது மகளை மணம்முடித்துத் தருவதாக அறிக்கையிட்டார்.
அப்போது சிவன், ஒரு பரவனாக உருவெடுத்து அந்த மீனைப் பிடித்து, அரசனின் மகள் *“திரைசேர்மடந்தை”* என்ற பெயரில் உள்ள தனது மனைவியான பார்வதியை மணந்துகொண்டான்.
6) மகாபாரதத்தின் *“ஆதிபருவம்”* (Adiparva) என்ற பகுதியில் , பரவனின் அரசன் யமுனைக் கரையில் அரசாண்டதாகவும் ஒரு மீனின் வயிற்றிலிருந்து ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்ததாகவும் , அவளுக்கு “மச்சகந்தி” (Machchakindi) எனப் பெயரிட்டு தனது மகளாக வளர்த்ததாகவும், அவள் பருவம் அடைந்தபின் குலவழக்கப்படி பரவப் பெண்களோடு சேர்ந்து ஆற்றின் குறுக்கே பரிசலோட்டிப் பயணிகளை மறுகரை சேர்க்கும் பணியினை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஒருநாள் *“பராசர முனிவர்”* (Parasara Sage) பரிசல் துறையில் மச்சகந்தியை கண்டு காதல் கொள்ள, அவள் கறுவுற்று ஈன்ற குழந்தைதான் புராணங்கள் பலவற்றை இயற்றிய புகழ்பெற்ற *“வியாசர்”* (Viyasar)ஆவார். பின்னர் மச்சகந்தியின் அழகில் மோகங்கொண்ட சந்திர குல மன்னனான *“சந்தனு”* (King Santanu of Lunar Race) அவளை தன் மனைவியாக ஏற்று, பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் மூதாதையான *“விசித்திரவீரியனை”* (Vichitravirya) பெற்றெடுத்தாள். அஸ்தினாபுர அரசுக்கு உரிமை கொண்டாட நடத்தப்பட்ட பெரும் போரே மகாபாரத இதிகாசத்தின் மூலக் கருவாகும். இதனால்தான் பரவர்கள் தங்களைச் *“சந்திர குலத்தவர்”* என்று கூறிக்கொள்வார்கள். மேலும் தங்களது திருமண விருந்தினில் சந்திர குலச் சின்னங்களையும் கொடிகளையும் காட்சிப்பொருளாக ஏற்றி வைக்கின்றனர்
7) இலங்கையின் வடமேற்குக் கரையில் உள்ள *“குதிரைமலை”* (Kudremalle)யில் அரசாண்ட *“அல்லியரசாணி”* (Alliarasany) பற்றி நடத்தப்படும் நாடகத்தில் , பரவர்கள் ஒரு முதன்மைப் பாத்திரத்தில் பங்கெடுக்கின்றனர். கடற்கரையில் முத்தெடுக்க பரவர்களை அந்த அரசி பணியில் அமர்த்தியதாகவும், ஒவ்வொரு முத்துக்குளிப்பிலும் பத்துக்கலம் முத்தினை அரசிக்கு பரவர்கள் தரவேண்டும் என்ற விதிமுறை கொண்டிருந்ததாகவும் நாடகத்தில் கூறப்படுகின்றது.
8) *1871 சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கை*யின் படி “பரவர்கள் மதுரை, திருநெல்வேலிக் கடற்கரைச் சார்ந்த மீனவர்கள் ஆவார்கள். இவர்கள் போர்த்துக்கீசியர் இந்தியாவிற்கு வந்தபோது முகமதியர்களின் அடக்கு முறையில் சிக்கித்தவித்தனர். இதனைக் கண்ட போர்த்துக்கீசியர் இவர்கள் கிறிஸ்த்தவர்களாக மதம் மாறினால் அவர்களுக்கு உதவுவதாகக் கூறியதால், அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் தென்கிழக்குக் கடற்கரையினைச் சேர்ந்தவர்களில் பலர் ரோமன கிறிஸ்த்தவர்களாக மதம்மாற காரணமானது.”
அதே அறிக்கையில், *திரு. எஸ். பி. றைஸ்* (S.P. Rice – Occasional Essays on Native South Indian Life, 1901) இந்த மீனவர்களைப் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
” தென் கோடியில் வாழும் இந்த மீனவர்கள் மிகவும் பக்தியுள்ள கத்தோலிக்கர்கள் ஆவார்கள். இவர்கள் தங்களது முன்னோர்கள் மதம் மாறிய போது அவர்களுக்கு வைக்கப்பட்ட போர்த்துக்கீசிய *“ஜோஸ்ப் பர்னான்டோ மற்றும் மரிய சந்தியாகு”* (Jose Fernandez and Maria Santiago)போன்ற பெயர்களை இன்றும் தாங்கியவர்களாக இருந்தாலும், நேரில் காணும்போது இடையில் கழுத்தில் கன்னி மேரியின் படங்கொண்ட உத்தரியம் அணிந்தவர்களாக காட்சியளித்து பழங்கால முறைப்படி மீன்பிடிக்கும் சாமானியர்கள், என்பது ஒப்புக் கொள்ளமுடியாத ஒரு செய்தியாகும்.”
9) *1901 சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கை* (Madras Census Report 1901) பரவர்களைப் பற்றி கூறுவதாவது
” பரவன் என்ற பெயருக்குரியனவாக முறையே தமிழ், மலையாளம், கன்னடம் பேசும் மூன்று சாதிகள் உள்ளன. இந்த மூன்று பிரிவினருமே தமிழ் பேசும் *பரவன் அல்லது பரதவர்களின்* வழித்தோன்றல்களாக இருக்கலாம்.
*தமிழ் பரவர்கள்* கடற்கரையோர மீனவர்களாகும். இவர்களின் தலைமையிடம் தூத்துக்குடி. தலைவன் என்றொருவன் அவர்களை ஆட்சிப்புரிவான். இவர்களில் பெரும்பாலோர் பாரம்பரியக் கிறிஸ்த்தவர்கள். தங்களைப் பாண்டியர் குலத்தைச் சேர்ந்த *சத்திரியர்* எனக் கூறிக்கொள்ளும் இவர்கள் பிராமணர்கள் இல்லத்தில் மட்டுமே உணவு உண்பர்.
*மலையாளப் பரவர்கள்* கிளிஞ்சல் பொறுக்குதல், சுண்ணாம்புக் காளவாய் போடுதல், உடற்பயிற்சி ஆகியவற்றில் ஈடுபடுவார்கள்; இவர்கள் வீட்டுப் பெண்கள் மகப்பேறு பார்க்கும் மருத்துவச்சிகளாக இருப்பார்கள். இவர்களின் பட்டப்பெயர்கள் *குருப்பு, வாரக்குருப்பு, நூறன் குருப்பு* (Kurup, Varakurup, Nurankurup)ஆகியவனாகும்.
*கன்னடப் பரவர்கள்* குடைகட்டிகளாகத் தொழில் செய்வதோடு பூத ஆட்டக்காரர்களாகவும் விளங்குகின்றனர்.
மேலும் மேற்குக் கடற்கரையில் வாழும் பரவர்கள், முகமதியரின் கொடுமைகளிலிருந்து தப்பிக்க திருநெல்வேலியிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
10) *மன்னார் வளைகுடாவில் இந்தியர்கள் முத்துக்குளித்தல் தொடர்பான அறிக்கையில்* (Report of the Indian Pearl Fisheries in the gulf of manner 1905) திரு. ஜெ. ஹெர்னெல்(J.Hornell), மன்னார் வளைகுடாவின் இந்தியக் கடற்கரை சார்ந்து வாழ்கின்ற பரவர்களின் வரலாறு பற்றியும், முத்துக்குளித்தலோடு அவர்கள் கொண்ட தொடர்பு பற்றியும் பல தகவல்களை தந்துள்ளார். அவை:
“ முத்துக்குளிக்கும் தொழில் நினைவுக்கு எட்டாத காலந்தொட்டு, பரவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருவதாக வழக்குவரலாறு தெரிவிக்கின்றது. கி.மு. முதல் ஆண்டுகள் தொடர்ந்து மதுரை,திருநெல்வேலி மாவட்டங்கள் என்று இன்று வழங்கப்படும் பகுதி தமிழர்களுக்குரிய பாண்டியப் பேரரசாக இருந்து வந்திருக்கின்றது என்பது தெரிந்த செய்தியாகும். பழைய தமிழ் நூலான *‘கல்வேடு’* (kalvedu) என்ற நூலில், பாண்டிய மன்னனுக்கும் முத்துக்குளிக்கும் பரவர்களுக்கும் இடையேயான உறவு பற்றிய குறிப்பு கீழ்க்கண்டவாறு காணப்படுகின்றது
*வேதநாராயணன் செட்டியும்* (VidanarayanenCheddi) முத்துக்குளிக்கும் பரவர்களும் மதுரையை ஆண்டுவந்த *பாண்டியன்* மகளான *அல்லியரசாணிக்கு* (Alliyarasani) கப்பம் செலுத்தி வந்தனர். அவள் கடலில் பயணம்போன போது அவர்களது கப்பல் புயலில் அகப்பட்டு, இலங்கையின் கரையில் ஒதுங்க, அங்கு அவர்கள் *கரைநேர்கை, குதிரைமலை* (Karainerkai and Kutiraimalai) ஆகிய இடங்களைக் கண்டனர். வேதநாராயணன் செட்டி தனது கப்பலில் இருந்த செல்வம் முழுவதையும் அங்கேகொண்டு சேர்க்க பரவர் உதவியை நாடினார்.கடலிகிலபம்,கல்லக்கிலபம்(Kadalihilapam,Kallachihilapam) ஆகிய துறைகளில் பரவர்கள் முத்துக்குளிக்க ஏற்பாடுகள் செய்வதோடு, இரும்பைப் பொன்னாக்கும் இரசவாதத்திற்கு உதவும் மரங்களையும் அங்கிருந்து கொண்டுவந்தான்
கொற்கையில்(Korkai) பரவர்கள் மிகுந்த செல்வாக்கு உடையவர்களாக விளங்கினர் என்று மதுரைக்காஞ்சி(Madurai Kanchi) தெரிவிக்கின்றது. மீனை உணவாகக் கொள்ளும் பரவர்கள் வில்லையேந்தி கூட்டமாகத் திரிந்து, பகைவர்களைத் தங்களுடைய புறங்காட்டாத வீரச்செயல்களால் அச்சுறுத்தி வந்தனர். பரவர் நாட்டின் முக்கியப் பட்டணம் கொற்கை என்றும், அங்கு முத்துக்குளிப்பவர்களும் சங்கு அறுப்பவர்களுமே பெறும் அளவில் வாழ்கின்றனர் என்றும் , மதுரைக்காஞ்சி தெரிவிக்கின்றது
பாண்டியர் அரசு வலிமைவாய்ந்ததாக இருந்த காலத்தில், பரவர்கள் அரசரிடமிருந்து பாதுகாப்பினையும் வரிவிலக்கினையும் பெற்று வந்தனர்.”
மேற்கூறியன அனைத்தும் பரவர்களின் தோற்றம் பற்றி வழங்கி வரும் பதிவுகளாகும் ஆகும். இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருந்தாலும்  வர்ணகுலம் பற்றிய தொன்மையயையும் அதன் தொடர்ச்சியயையும் நமக்கு உணர்த்தி நிற்கிறது.
வர்ணகுலம் வர்ணகுலத்தான் குருகுலத்தான் எனவரும் தொடர்களும் மீகமன் பற்றிய குறிப்புகளும்வெடியரசன் பற்றிய நம்பிக்கைகளும் இம் மரபினரின் தொடர்ச்சியான இருப்பையும்நீட்சியயயும் வலியுறுத்துகின்றன.சிலப்பதிகாரத்தின் வழிவந்த ‘’கண்ணகி வழக்குரை’’ காவியம் மீகாமன் பற்றிய செய்திகளை தருகிறது.கண்ணகியின் காற்சிலம்பில் பதிக்க கூடிய நாகமணியயை தென் திசையில்தென் திசையில் உள்ள நாகத்தீவிலிருந்து கொண்டு வரக் கூடியவன் மீகாமனே என சொல்கிறது.
        ‘’கூட்டி வந்தார் வருணர் தமை குறையறுத்து கரை நீளும்
         வாட்டமற வைத்த நாளின்  வளங்கிய பேர் கரையார் காண்
          பாட்டிலவர் தம் பெருமை பகரவினித் தொலையாது
           மீட்டு புகழ் மீகாமன்சிறந்த மரபென உரைத்தார்’’
இது போலவே பரதர் குலத் தெருவில் வசித்து வந்தமீகாமனை அழைத்து வந்த செய்தியில்
        ‘’எல்லையிலா புகழ் பரதர் இருக்குமந்த தெரு புகுந்து
            மல்லையொத்த புயத்தானே வர்ணகுலத்துதித்தோனே''  
என மீகாமனின் வீரத்தை குறிப்பிடுகிறது.
கண்ணகி குளிர்த்தியில்
       ‘’மீகாமனுக்கு மிகுந்த வரம் கொடுத்து
        நாகமணி வாங்கவெண்று நயந்தாய் குளிர்ந்தருள்வாய்’’'
என வரும் வரிகளும் மீகாமன் பற்றிய செய்தியயை நமக்கு தருகிறது.
திருகோணமலியின் வரலாற்றையும் வளமைகளையும் கூறும் கோணேசர் கல்வெட்டு கொட்டியாரத்தில் கோணேசர் ஆலயத்துக்காக கொடுக்கப் படும் பொருட்கள் கெவுளிமுனையிலுள்ள மீகாமனிடம் சேர்ப்பிகப் படவேண்டும் எனக் குறிப்பிடப்பிடுகிறது இங்கு மீகாமன் ஒரு தலைவனாக காட்டப் படுவதை காணலாம்.
கோணெசர் கல் வெட்டு வேறு ஒரு தகவலையும் நமக்கு தருகிறது  கொட்டியாரத்தில் கூட்டப்பட்ட தேசத்தார் கூட்டத்தில் ஏழூர் அடப்பன் பற்றிய குறிப்பு வருகிறது. அடப்பன் அடப்ப்னார் என்ற பெயர்கள் ஒல்லாந்தர் கால குறிப்புகளின் படி குருகுலத்தவருக்குரிய தலைமைக் காரரின் பெயர்  என விளங்கிக் கொள்ள முடிகிறது.இப்படிப் பார்க்கும் போது கோணெசர் கல்வெட்டு கூறும் காலப் பகுதியில் கொட்டியாரத்தின் ஏழு ஊர்கள் குருகுலத்தவர்களுக்கு உரியதாக இருந்திருக்கிறது என புலனாகிறது.
‘’முக்கறு கற்றன’’ எனும் சிங்கள ஏட்டுச் சுவடீப்படியொரு குறிப்பை தருகிறது.’’7740 வீரர்கள் கொண்டகரவ சேனை கொர மண்டலம் என அழைக்கப் படும்காஞ்சிபுரம் ,காவிரிப் பூம் பட்டினம்,கீழைக் கரைஆகிய குருகுலப் பிரதேசங்களிலிருந்து வந்ததையும்,முக்குவரையும் துலுக்கரையும் போராடி வென்றனர் என்பதயும்விபரிக்கிறது.கோட்டை இராசதானியின் 6ம் பராக்கிரம பாகுவே(1412-1467)இவர்களை அழைத்தான் என்றுமவர்களுக்கு பல வீதிகளையும் வசிப்பிடங்களையும் 18துறைமுகங்களையும் வரியின்றி கொடுத்தான் என பிறிற்றோவின் யாழ்ப்ப்பாண சரித்திரம் கூறுகிறது’’
சோழப் பேரரசன் இராசேந்திர சோழன் இலங்கை மீதான படையெடுப்பை கூறும் திருமுருக கூடல் கல் வெட்டில்சிங்கள இராணுவத்தின் வீழ்ச்சியயயுமதில் தங்க கால்வளை அணிந்த குருகுலத்தராயன் வீழ்ந்து மடிந்ததும் கூறப் பட்டுள்ளது.
குருகுல மக்கள் வீரம் செறிந்தவர்களாகவும்போர்த்திறன் மிக்கவர்களாகவும் இருந்தமைக்கான சான்றுகள்பரவிக் கிடக்கின்றன வர்ணகுலத்தவர் பற்றிய புராணக்கதையொன்று  “ஜலப் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழிந்து நீரால் நிறைந்த போது மீகாமன் தோணி மட்டுமே வெள்ளத்தில் மிதந்ததாகவும் சிவபெருமானும் வெள்ளத்தில் தத்தளிக்க சிவன் தன்னை ஓடத்தில் ஏற்றும் படி கேட்க சிவனை கைதூக்கி விடாமல் வள்ளத்தை ஒருக்கணித்து ஏற இடமளித்த போது “உள்ளமும் கரயான் உகத்திலும் கரையான்’’ என கூறியதாக  இப்படி சொல்கிறது.
வர்ணகுலத்தாரின் கொடி மகரம்  மகரக் கொடி. மகரம் என்பது யானையின் தந்தத்தையும் சிங்கத்தின் கால்களையும்,பன்றியின் காதையும்,மீனின் உடலையும்,வெளித்தெரியும் பற்களையும்,குரங்கின் கண்களையும் அழகான தோகையயையும் கொண்ட கடற் பிராணியாகும்.அது பிரபஞ்சம் தழுவிய குறியீடாக அடையாளப் படுத்தப் படுகிறது.
வட இந்தியாவின் குருகுல வம்சத்தோடுஉறவு கொண்ட  பாண்டிய அரசர்கள் மகரத்தை தமது அடையாள சின்னமாக கொண்டனர் என நம்பப் படுகிறது.மகரம் எங்கள் குருகுல வம்சத்தின் அடையாளம் என வலைவீசு புராணம் சொல்கிறது.
கெறாஸ் அடிகளாரின் ஒரு கூற்றையும் கவனத்தில் கொள்ளலாம்"மொகஞ்சதாரோ களி மண் முத்திரையில் காணப்படும் மீன்களும் சந்திரனும் அவர்களது மூதாதயரான பாண்டிய மன்னனையும்கரையோரப் பரவ மக்களையும்குறிப்பதாகுமங்கு காணப்படும் எட்டு நட்சத்திர அடையாளங்களுள் நண்டு இரு சோடி மீன்கள்,மகரம் ஆகியன இடம் பெறுகின்றன.''
திருகோணமலை கோட்டை வாசலில் பொறிக்கப் பட்டுள்ள மீன் லச்சினைகளையும் இதனுடன் பொருத்திப் பார்க்கமுடியும்
இன்றும் சேனையூர் மக்களின் வம்சக் கொடியாக மகரமே பயன் பாட்டில் உள்ளது.  மாடுகளுக்கு சுடப்படும் குறி அடயாளமாக மகரமும் ஈர்க்கிலையும் பொறிக்கப் படுகிறது.மரண வீட்டில் செய்யப் படும் தேரில் மகரக்  கொடியே பறக்க விடப் படுகிறது .
திருகோனமலை மாவட்டத்தில் தென்னமரவாடி,திரியாய்,குச்சவெளி,கும்புறுபிட்டி,நிலாவெளி,சாம்பல்தீவு,சல்லி,தம்பலகாமம் ,கந்தளாய்,ஆலங்கேணி,திருகோனமலை நகரும் நகரை அண்டிய சூழலும்,மூதூர்,சேனையூர்,கட்டைபறிச்சான்,கடற்கரைச்சேனை,கெவுளிமுனை,சூடைக்குடாஆகிய இடங்களில் வர்ண குல மரபினரின் படர்ச்சி காணப் படுகிறது.
எங்கோ தொடங்கிய ஒரு வேர் சேனையூர் வரை தொடர்கிறது.கிழக்கு மாகாணத்தில் தென்னமரவாடி தொடக்கம் திருக் கோவில் வரை வர்ணகுல மரபும்  மீகாம பரம்பரை தொடர்ச்சியும் நீண்டு செல்கிறது.
  பலநூல்கலிலிருந்து பெறப் பட்ட தகவல்களையும் என் மூதாதயர் வழி வந்த குறிப்புகளையும்  இணைத்து இந்த கட்டுரை எழுதப் பட்டுள்ளது.ஒரு குல மரபின் தொடர்ச்சியென்பது  வரலாற்றின் வழியே வருகிரது என்பது நிருபணமாகிறது..