செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரின் வீட்டு உபயோகப் பொருட்கள்-7 அகப்பை

சேனையூரின் வீட்டு உபயோகப் பொருட்கள்-7
அகப்பை
நம் சமையல் காரியங்களில் தவிர்க்க மிடியாத ஒரு சாதனம் அகப்பை.
''சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்''இது பழமொழி.''
சேனையூரில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான அகப்பை பயன் படுத்தப் பட்டது,
சோறாக்க ஒருஅகப்பை
கறிக்கு
பெரும் அமுதுக்கு
பொங்கலுக்கு
பலகாரத்துக்கு என அமையும்.
கலை நயத்துடன் செயப் பட்ட அகப்பைகளை நான் கண்டிருக்கிறேன்.என் தகப்பனார் அகப்பை செய்வதை பார்த்திருக்கிறேன்.
தேங்காய் சிரட்டைகளை செருக்கி துளை போட்டு .பின் மரத்திலான காம்பை செருகுகிறபோது அகப்பை முழுமை பெறும்.அனேகமாக அகப்பை காம்புக்கு சமுள மரமே பயன் படுத்தப் படும்.

No comments:

Post a Comment