செய்திகள்,வரலாறு,பண்பாடு

Thursday 3 September 2015

சேனையூரின் முன்னோடிகள்1 சேர்மன்.கணபதிப்பிள்ளை

சேர்மன்.கணபதிப்பிள்ளை
  கட்டைபறிச்சான் கிராமசபையின் நீண்டகாலம் தலைவராக கடமையாற்றியவர்.சேனையூர் கிராமமுன்னேற்ற சங்கத்தின் ஆரம்பகால தலைவர்.எப்போதும் அவர் வேட்டியும் பாலாமணி சட்டையுடனுமே காணப்படுவார்.சேனையூர் கிராமத்தின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறையுடன் செயல் பட்டவர்.ஒரு கிராம சபையால் என்னவெல்லாம் ஒரு கிராமத்திற்கு செய்ய முடியுமோ அவையெல்லாவற்றையும் பெற்றுக் கொடுத்தவர்.சிறு வீதிகள் ,போக்குகுகள் ,வடிகால்கள்,கேணிகள் என அவர் பணிகள் சிறப்பாக இருந்தன..1957ல் மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்ட போதும்  மிகப் பெரிய மழை காலங்களிலும் தன்னலம் பாராது கடமையாற்றுவார் என இங்குள்ள பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.கல்வி  விளையாட்டு,சமுக சமய அபிவிருத்தியில் இவர் மிகுந்த கவனம் செலுத்தியவர்.அவர் இறக்கும்வரை சேர்மன் என்ற அடைமொழி அவருடனேயே இருந்த்தது.பின்னாளில் அவர் சேர்மனாக இல்லாத காலங்களிலும் அவரை எல்லொரும் சேர்மன் எனவே அழைப்பர்.சேனையூரில் மிகப் பழமையான குடும்பங்களில் இவருடய குடும்பமும் ஒன்று.எங்களுக்கெல்லாம் ஒரு முன்னோடியாக செயல் பட்ட ஒரு மிகப் பெரிய ஆளுமை.

No comments:

Post a Comment