செய்திகள்,வரலாறு,பண்பாடு

Monday 7 September 2015

சேனையூர் முன்னோடிகள் -5 வைத்தியர் புலவர் பத்தினியர்

சேனையூர் முன்னோடிகள் -5
   வைத்தியர் புலவர் பத்தினியர்

 அரச அங்கிகாரம் பெற்ற சித்த மருத்துவர்.வாகட நூல்களை கற்று தேறியவர்.நிகண்டு போன்ற இலக்கண நூல்களில் தேர்ச்சி பெற்றவர்.இயல்பாக செய்யுள் இயர்ருவதில் வல்லவர்.எழுத்தானி கொண்டு ஏடுகளில் தன் படைப்புகளை எழுதி வைத்திருந்தார்.ஆனால் அவை கால வெள்ளத்தில் கரைந்து போயின.தொடர்ச்சியாக வந்த வன் செயல்கள் அவற்றை அழித்து விட்டன.அவர் வீட்டில் பல ஏடுகள் பூட்டி வைக்கப் பட்டிருந்ததை நான் கண்டிருக்கிறேன்.

என் நண்பன் நவரத்தினத்தின் நெருங்கிய உறவினர்.அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தாலும் அவர் அருமை புரியவில்லை.நிறய நான் அவரோடு பேசியிருக்கிறேன்.அடிக்கடி நிகண்டு பற்றியே எங்களிடம் பேசுவார் அப்போது எங்களுக்கு விளங்கவில்லை.பின்னாலில் அவர் இறப்பிற்கு பிறகுதான் காலம் கடந்து விளங்கிக் கொண்டோம்.

அகட விகடமாக பேசுவார்.இலகுவில் சிரிக்க மாட்டார்.

No comments:

Post a Comment