சேனையூர் முன்னோடிகள்-10
சேனையூரின் முதல் ஆசிரியர்
ஆசிரியர் திலகம் கதிர்காமத்தம்பி.சீவரத்தினம்
ஆசிரியர் திலகம் கதிர்காமத்தம்பி.சீவரத்தினம்
சேனையூர் கிராமத்தின் முதல் ஆசிரியர் என்ற தகுதியயை பெற்றவர்.சேனையூர் மெஹடிஸ்த மிசன் கல்லூரியில் தன் ஆரம்ப கல்வியயை கற்று பின் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையில் தன் கல்வியயை தொடர்ந்து ,சிறப்பு தேர்ச்சிகள் பெற்று ஆசிரியர் கலாசாலை சென்று ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் பெற்று ஆசிரியராக முதன்மை பெற்ரவர் .
சேனையூர் மத்திய கல்லூரியின் மிக நீண்டகால ஆசிரியர் பெரிய அய்யா நடராசா அவர்களின் காலத்தில் பாடசாலையின் வளர்ச்சிக்கு மிகுந்த பணியாற்றியவர்
சேனையூர் மத்திய கல்லூரியின் மிக நீண்டகால ஆசிரியர் பெரிய அய்யா நடராசா அவர்களின் காலத்தில் பாடசாலையின் வளர்ச்சிக்கு மிகுந்த பணியாற்றியவர்
நான் முன் மாதிரியாக வரித்துக் கொண்டவர்களில் இவரும் ஒருவர்.சுகாதாரப் பாடம் கற்பிப்பதில் இவருக்கு நிகராக வேறு யாரையும் குறிப்பிட முடியாது.இன்றும் அவர் படிப்பித்த அந்த பாடம் முறைமை என்னுள் அப்படியே பதிந்து போயுள்ளது.
சேனையூர் மத்திய கல்லூரியில் சாரணர் இயக்கத்தை அறிமுகப் படுத்தி அதனை உச்ச நிலைக்கு கொண்டு சென்றவர்.சாரண இயக்க செயற்பாடுகளில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்.பின்னாளில் மாவட்ட சாரணர் சபையின் முக்கிய உறுப்பினராக அங்கம் வகித்தவர்.
திருகோணமலை பெருந்தெரு மிதடிஸ்த மிசன் பாடசாலை விகேஸ்வரா மகாவித்தியாலயமாக தரமுயர நடராசா அய்யாவுடன் இணைந்து செயல் பட்டவர் ,பின் அப்பாடசாலை அதிபராக சிறப்பாக செயல் பட்டவர்.
திருகோணமலை கோணேஸ்வரா வித்தியாலத்தை இலங்கையின் தலை சிறந்த பாடசாலைகளில் ஒன்றாக மாற்றிக் காட்டியவர்.
திருகோணமலை மாவட்டத்தில் சாதனை படைத்த ஒரு கல்வியாளன் இன்று நம் மத்தியில் வாழும் மிகச் சிறந்த கல்வியாளர்
No comments:
Post a Comment